Skip to main content

“எனது கண்டுபிடிப்பு பயன்பாட்டிற்கு வந்தால் அரசு செலவினைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும்” - விவசாயி நரசிம்மன்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

"If my invention comes in handy, government spending can be brought under control" - Farmer Narasimhan

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1 கிலோ வோல்ட் மின்சாரத்தை 2.72 மடங்காக எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் விவசாயி நரசிம்மன் இயந்திரத்தை மின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது குறித்து அண்மையில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் தனது கண்டுபிடிப்பு மக்களுக்கும் அரசுக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தனது கண்டுபிடிப்பை அரசுக்குத் தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார் விவசாயி நரசிம்மன்.

 

இது குறித்து அவர் கூறுகையில், "தான் வாழும் கண்டராதித்தம் பஞ்சாயத்தில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் விநியோகத்திற்காக மட்டும் மின்பயன்பாட்டிற்காக மின்சார வாரியத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ 1.5 இலட்சம் கட்டணமாகச் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் எனது கண்டுபிடிப்பை அரசுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் 3ல் இரண்டு மடங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவினைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும். இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் தமிழக அரசின் நிதிச்சுமையைக் குறைக்க செலவைக் குறைக்கும் வகையில் புதிய திட்டங்களைத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

 

அந்த வகையில் எனது எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை நடைமுறைப்படுத்தும்போது பெருமளவில் நிதிச்சுமையை உறுதியாகக் குறைக்க இயலும். எனது கண்டுபிடிப்பு நாட்டுடமையாக்கப்பட வேண்டும்" எனத் தமிழக அரசை கேட்டுக்கொண்டார். திருமானூர் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விவசாயி நரசிம்மன் கண்டுபிடித்த மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை ஆய்வு செய்தார். அதிகாரிகள் ஆய்வின் போது திருமழபாடி  உதவி மின்பொறியாளர் பிரபாகரன் உடனிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மலைத் தேனீக்கள் கொட்டி விவசாயி உயிரிழப்பு!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Farmer incident by mountain bees

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வாரப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த பணி காரணமாக காப்பிலியபட்டிக்கு வருகை தந்துள்ளார். பின்னர் தனது பணிகளை முடித்துக் கொண்டு கல்வாரப்பட்டிக்கு திருப்பிக் கொண்டிருந்துள்ளார்.

இவர் மா.மு. கோவிலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் இருந்த தேன் கூடு கலைந்து ஏராளமான மலைத் தேனீக்கள் வெளியேறியுள்ளன. இந்த தேனீக்கள் சாலையில் சென்று கொண்டிருந்த விவசாயி காளியப்பனை கொட்டியுள்ளன. இதனால் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவ்வழியே சாலையில் சென்று கொண்டிருந்தவர்களையும் தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் 8க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மலை தேனீக்கள் கொட்டியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.