Skip to main content

குட்கா முறைகேடு- விஜயபாஸ்கரிடம் விசாரணை நிறைவு!!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
v

 

நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

 

குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா  ஆஜராகும்படி  சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.    

 

ramana

 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகினார். அவரிடம் தொடர்ந்து 9 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அதனை அடுத்து   விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் சிபிஐ நடத்திய விசாரணையும் தற்போது நிறைவு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்