Skip to main content

பா.ஜ.க. கட்டுப்பாட்டில் தமிழக அறநிலையத்துறை! முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதி குற்றச்சாட்டு..!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

Former MP balabarathi press meet

 

 

பழனியில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாத ரோப்கார், பிஞ்சு ஆகியவை பாஜகவினருக்கு இயக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் அறநிலைத்துறை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது என்றே தோன்றுகிறது என  முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.  பாலபாரதி நிருபர்களிடம் பேசும்போது, “யாத்திரை என்பது பா.ஜ.க.வின் மதவெறி யாத்திரையாக உள்ளது. தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக வேலையாக யாத்திரை உள்ளது. நீதிமன்றம் தடை செய்த யாத்திரையை மாநில அரசு கண்டுகொள்ளாமல் நடைபெற்றுவருகிறது. 

 

காலையில் யாத்திரை, மாலையில் கைது என்று போலி நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாத ரோப்கார் ஆகியவை பாஜகவினருக்கு இயக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் அறநிலைத்துறை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றே தோன்றுகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போது கைது செய்யப்படுவது ஜனநாயக விரோத நடவடிக்கை. பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டவுடன் விடுவிக்கப்படுகிறார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட பின்னர் 12 மணிக்கு மேல் விடுவிக்கப்படுகிறார். இது எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கூடிய விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாலியல் வன்கொடுமை: திண்டுக்கல்லில் இருந்து கோட்டைக்கு நடைபயணம்” - பாலபாரதி

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

Walking from Dindigul to the chennai assembly  says Balabharathi

 

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி வழங்க வேண்டும். பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி திண்டுக்கல்லில் இருந்து கோட்டை நோக்கி நடை பயணம் சென்று, முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பாலபாரதி தெரிவித்துள்ளார். 

 

பாச்சலூர் சிறுமி மரணம் தொடர்பான வழக்கில், கடந்த 10 நாட்களாக குற்றவாளிகளைக் கைது செய்யாத நிலையில், மாதர் சங்கம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாறுதல் செய்துள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மாதர் சங்கம், விடியல் பெண்கள் கூட்டமைப்பு சார்பாக மணிக்கூண்டு அருகே இன்று (24.12.2021) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Walking from Dindigul to the chennai assembly  says Balabharathi

 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாலபாரதி பேசியதாவது, “திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக சுமார் 500 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 20 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 187 வழக்குகளில் குற்றவாளிகள் தப்பியுள்ளனர். பல வழக்குகள் இன்னும் கிடப்பிலே உள்ளன. எனவே தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக அளவில் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு, திண்டுக்கல்லில் பணியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்டு பகிரங்கமாக பொது விசாரணை நடத்த முன்வர வேண்டும். திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி மாதம் இறுதியில் திண்டுக்கல்லில்  இருந்து கோட்டை நோக்கி மாபெரும் நடைபயணம் மேற்கொண்டு, முதல்வரை சந்தித்து, மனு கொடுத்து பொது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.” இவ்வாறு அவர் பேசினார். 

 

இதில் விடியல் பெண்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் டாக்டர் அமலாதேவி, பேராசிரியை வெண்ணிலா, அருட்தந்தை பிலிப் சுதாகர், மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராணி, ஜானகி வனஜா உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

Next Story

வேளாண்மை சட்டங்களுக்கு எதிராகத் தரையில் படுத்துப் போராட்டம்... முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை குண்டு கட்டாகத் தூக்கிச் சென்ற போலீசார்!!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

Balabharathi arrested in dindigul


மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களைtத் திரும்பப் பெறக் கோரி, திண்டுக்கல்லில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்ததால், தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மாவட்ட அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அஞ்சலி ரவுண்டானா பகுதியில் இருந்து அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். 


அப்போது, போலீசார் அவர்களை தடுப்புகளை வைத்துத் தடுத்து, போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று எச்சரித்தனர். தாங்கள் காத்திருப்புப் போராட்டம் மட்டுமே நடத்தச் செல்வதாகக் கூறினர். இருந்தபோதும், போலீசார் அவர்களை அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், போலீசாரை மீறி கலெக்டர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். 


இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர், பஸ்களின் அடியில் சென்றும், சுவர்களின் மீது ஏறியும், போலீசாருக்கு எதிராகக் கோஷமிட்டனர். அது மட்டுமல்லாமல், தரையில் படுத்தும் போலீசாருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். 


அதுபோல் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் பாலபாரதியையும் போலீசார் குண்டுகட்டாகத் தூக்கியும் இழுத்துச் சென்றும் கைதுசெய்தனர். அதைக்கண்டு டென்ஷன் அடைந்த ஏனைய நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதுபோல், சில பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இதில், சச்சிதானந்தம் பாண்டி பெருமாள், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் செல்வராகவன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அப்போதும் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோஷமிட்டனர்.