Skip to main content

காதலித்து திருமணம் செய்தேன்... ஆண் நண்பர்களுடன் டிக்டாக்கில் அடிக்கடி அரட்டை... நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

மது போதையினால் தகாத உறவுகள் ஏற்பட்டு சமூகம் சீரழிவது ஒரு பக்கம் இருக்க, அந்த போதைக்கு இணையாக இருக்கும் டிக்டாக் செயலியினாலும், தகாத உறவுகள் ஏற்பட்டு பல குடும்பங்கள் சீரழிகின்றன.

கொண்டாட்டம் என்ற பெயரில் துவங்கும் டிக்டாக் பெரும்பாலும் தகாத உறவுகளிலேயே முடிகிறது. இப்படி டிக்டாக் மூலம் பிரியாணி கடை ஊழியருடன் உருவான தகாத உறவினால் பெற்ற குழந்தைகளையே கொன்றுவிட்டு சிறையில் அடைபட்டிருக்கிறார் இளம்பெண் குன்றத்தூர் அபிராமி. இப்போது, அதே டிக்டாக்கினால் இளம்பெண் ராஜேஸ்வரி 25 வயதிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். எந்த முகம் அழகாக இருக்கிறது என்று டிக்டாக் வீடியோவில் மூழ்கிக் கிடந்தாரோ அதே முகம் இரும்புக்கம்பியாலும், குழவிக்கல்லினாலும் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

 

tik tok



தன் மனைவி இளைஞர்களுடன் காதல் கும்மாளம் போடும் 300 டிக்டாக் வீடியோக்களை பார்த்த ஆத்திரத்தில்தான் கணவனே ராஜேஸ்வரியை படுகொலை செய்திருக்கிறார். போலீசார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் காடாம்புலியூரைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டும் டிரைவர் குமரவேலுவும் ராஜேஸ்வரியும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். சில ஆண்டுகள் காடாம்புலியூரிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 6 வயது வர்ஷினி, 4 வயது ராகுல் என்று இரு குழந்தைகள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினர்.

கடந்த 15-ஆம் தேதி காலைப்பொழுதில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் இருந்து வீட்டு வாசற்படி வழியே ரத்தம் வழிந்து வெளியே ஓடியிருக்கிறது. அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்கவே... பண்ருட்டி டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்தபோது, குமரவேல் மனைவி ராஜேஸ்வரி தலை நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது கணவர், குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. இதையடுத்து, தலைமறைவான குமரவேலுவை போலீசார் காடாம்புலியூர் பகுதியில் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர். குமரவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் மனைவியை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்கள் இருவருக்கும் சமீபகாலமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

 

incident



இதனால் என்னிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றாள். அங்கிருந்து எனக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகு இருதரப்பும் சமாதானமாக, ராஜேஸ்வரியின் விருப்பப்படி பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினோம். இங்கு வந்த பிறகும் என் மனைவி திருந்தவில்லை. என் மனைவி செல்போனில் டிக்டாக் மூலம் பாடல் பாடியும், நடித்தும் மிமிக்கிரி செய்து வெளியிட்டு அதன்மூலம் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். அதை நான் பலமுறை கண்டித்தேன், அவள் கேட்கவில்லை. காதலர் தினத்தன்று நான் கார் சவாரிக்கு சென்றுவிட்டேன். அதை சாதகமாக்கிக்கொண்டு ஆண் நண்பர்களுடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். இது பற்றி அவரிடம் எச்சரித்தேன். ’நம் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும்; இந்த தவறான பழக்கத்தை நிறுத்து' என்று கூறினேன். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அதன்பின் ராஜேஸ்வரி தூங்கிவிட்டார்.

நான் கோபம் தணியாமல் இருந்தேன். இரவு பதினொரு மணிக்கு மேல் பக்கத்தில் இருந்த குழவிக் கல்லை எடுத்து ராஜேஸ்வரி தலையில் போட்டேன். அங்கிருந்த இரும்பு ராடையும் எடுத்து தலையில் தாக்கினேன். இதில், ராஜேஸ்வரி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் இறந்துவிட்டார். அதன்பிறகு என் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காடாம்புலியூர் சென்றுவிட்டேன்''’என்று தெரிவித்துள்ளார்.


ராஜேஸ்வரிக்கு டிக்டாக் பழக்கம் இருந்தது போலவே, குமரவேலுவுக்கு திருநங்கைகள் பழக்கம் இருந்துள்ளது. ஆண் நண்பர்களுடன் டிக்டாக்கில் அடிக்கடி அரட்டை அடிப்பதைத் தெரிந்துகொண்டு, அதை சுட்டிக்காட்டி குமரவேல் சண்டை போட்டிருக்கிறார். அதே போலவே, திருநங்கைகளுடன் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டி ராஜேஸ்வரி அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார் .இதனால் தான் இருவரும் பிரிந்து விவாகரத்து வரை சென்றிருக்கிறார்கள் என்ற விவரம் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குமரவேல் தற்போது சிறையில் உள்ளார்.

பெற்றோர்கள் எடுத்த தவறான முடிவுகளால் இரு குழந்தைகளும் செய்வதறியாது தவித்துக்கொண்டிருக்கிறார்கள். டிக்டாக் போதையினால் இப்படி ஒரு பக்கம் சமூகம் சீரழிந்துவரும் நிலையில், மது போதையினால் தகாத உறவுகள் உண்டாகி தினம் தினம் படுகொலைச் சம்பவங்கள் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் புங்குவார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மேள இசைக்கலைஞர் சண்முகம். இவருக்கு மாரியம்மாள் (வயது45) என்ற மனைவியும், 5 பிள்ளைகளும் இருந்தனர். நான்கு பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாரியம்மாளுக்கும் எதிர்வீட்டு இளைஞர் ராமமூர்த்தி (28 வயது )க்கும் தகாத உறவு ஏற்பட்டது. சண்முகம் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும்போது மாரியம்மாளும் ராமமூர்த்தியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் சண்முகத்துக்கு தெரியவந்ததும், அவர் பலமுறை மனைவி மாரியம்மாளை எச்சரித்துள்ளார். மாரியம்மாள் அதை பொருட்படுத்த வில்லை. கடந்த 15-ஆம் தேதி வழக்கம்போலவே மாரியம்மாளும், ராம மூர்த்தியும் உல்லாசமாக இருந்தபோது, இருவரையும் வீச்சரிவாளால் வெட்டிச் சாய்த்தார் சண்முகம். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கடலூர் மாவட்டம் கிருஷ்ணன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமசுந்தரி (வயது 45) இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தனியார் கம்பெனியில் வெளியூர்களில் வேலை பார்க்கிறார்கள். இவரது கணவர் பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவகாமசுந்தரி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் கைதான 26 வயது இளைஞர் ஜெயசீலன் அளித்த வாக்குமூலத்தில், "சிவகாமசுந்தரிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் கீழே இருவரும் அடிக்கடி மது குடித்துவிட்டு உல்லாசமாக இருப்போம். அன்றைக்கும் அப்படி இருந்தபோது, எனது திருமணம் பற்றிய விவாதத்தில் ஆத்திரத்தில் அவரை அடித்ததும் இறந்துவிட்டார்'’என்று கூறியுள்ளார்.

"இப்படிப்பட்ட சம்பவங்களால், பண்பாடு, கலாச்சாரம், அன்பு, பாசம் என உலகத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தமிழினம் இப்பொழுது அதையெல்லாம் சீரழித்துக் கொண்டிருக்கிறது'' என்று வேதனையை தெரிவிக்கும் சமூக ஆர்வலரான வடலூர் கல்விராயர், "தமிழகத்தில் உள்ள அனைத்து சாராயக்கடைகளையும் மூடவேண்டும். அதேபோல் செல்போன் வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டும். அரசு பொதுநல அமைப்புகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கவேண்டும்'' என்கிறார் அக்கறையுடன்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.