Skip to main content

இரவு நேர 108 ஆம்புலன்ஸ் சேவையை நிறுத்திய மாவட்ட நிர்வாகம்! காயமடைந்தவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவலம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023

 

district administration stopped the night-time 108 ambulance service

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த வந்த நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும், பார் ஊழியர்களுக்கும் வாய்த் தகராறு முற்றி, செந்தில் தான் வைத்திருந்த ஆடு உரிக்கும் கத்தியால் பார் ஊழியர் சுதாகர்(எ)கணேசனை தொடையில் குத்தி கிழிக்க சக பார் ஊழியர்கள் செந்திலை கல் மற்றும் கட்டையால் தாக்கியதில் செந்தில் மண்டை உடைந்து சாய்ந்தார்.

அங்கு நின்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்ல ஒரு கி.மீ தூரத்தில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிற்கும் ஆம்புலன்சை அனுப்பாமல் 20 கி.மீ தூரத்தில் உள்ள மறமடக்கி கிராமத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்து செந்திலை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றது. இதனால் ஒருமணி நேரத்தில் அதிகமான ரத்தம் வெளியேறியது. தொடையில் காயமடைந்த கணேசனை அங்கிருந்த இளைஞர்கள் பைக்கில் கீரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கீரமங்கலம் ஆம்புலன்ஸ் ஏன் வரவில்லை என்று கேட்டபோது, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்களுக்கு 8 மணி நேரம் பணி கொடுங்கள் அல்லது 24 மணி நேர பணி கொடுங்கள். முழு ஒரு நாள் பணி பார்த்துவிட்டு ஒரு முழு ஒரு நாள் (24 மணி நேரம்) ஓய்வு எடுத்துக் கொள்கிறோம் என்று அந்தந்த மாவட்ட 108 நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்ட 108 நிர்வாகம் பணி நேரம் 12 மணி நேரம் தான். 12 மணி நேரம் பணி முடிந்ததும் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு செல்லுங்கள். இரவில் ஓட்ட வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டதால் கீரமங்கலம் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 12 மணி நேர பணிக்காலம் முடிந்து இறங்கிச் சென்றுவிட்டதால் பணியாளர் இல்லாமல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் கீரமங்கலம் ஆம்புலன்ஸ் வரவில்லை என்கின்றனர். 

இதே போல ஒவ்வொரு நாளும் மாவட்டத்தில் பல ஆம்புலன்ஸ்கள் இரவில் நிறுத்தப்படுவதால் அவசரகால சேவை பாதிக்கப்படுகிறது என்கின்றனர். அவசரம், ஆபத்தான நேரங்களில் உயிர் காக்க தான் 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் மாவட்ட 108 நிர்வாகம் பணியாளர்களை வஞ்சிக்கும் நோக்கத்தில் இரவில் ஆம்புலன்ஸ் சேவையை நிறுத்தி பொதுமக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள். பல இடங்களில் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணியும் அமைத்துள்ளனர் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.