Skip to main content

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல முயன்ற இயக்குநர் கவுதமன் ராமேஸ்வரத்தில் தடுத்து நிறுத்தம்!

Published on 23/02/2018 | Edited on 23/02/2018



கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல முயன்ற இயக்குநர் கவுதமன் ராமேஸ்வரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் ஆனிவேராக இருக்கும் கச்சத்தீவு அந்தோனியார் கோவிவில் இன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க இயக்குனர் கவுதமனுக்கு விழா குழு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் கச்சத்தீவு செல்ல தடையில்லா சான்று வழங்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் கவுதமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கவுதமன் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தடையில்லா சான்று வழங்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட்டங்களில் தான் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவுதமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, இதேபோல கச்சத்தீவில் எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என காவல்துறை நினைத்திருக்கலாம் என தெரிவித்து, வழக்கை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், காவல்துறையின் மறுப்பை மீறி, இன்று காலை கச்சத்தீவு திருவிழாவுக்கு இயக்குநர் கவுதமன் செல்ல முயன்றார். அப்போது, ராமேஸ்வரம் அருகே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கலர் கலராக பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்'-திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பதில்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'They have started telling lies one after another' - DMK's RS Bharati replied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்போது முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

'They have start'They have started telling lies one after another' - DMK's RS Bharati replieded telling lies one after another' - DMK's RS Bharati replied

இந்நிலையில் திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் கச்சத்தீவு விவகாரம்  குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர் அவர், ''ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று மோடி நம்பிக் கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக எடுபடாது. இதுகுறித்து தமிழக முதல்வர் தெளிவாக இன்று பதில் சொல்லிவிட்டார். கேட்கின்ற நிதியை தமிழகத்திற்கு கொடுப்பதற்கு மனம் இல்லாத மோடி, மக்களுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக இப்படிப்பட்ட நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஏதோ கச்சதீவை முந்தாநேத்து கொடுத்த மாதிரி, இன்றைக்கு அதைப் பற்றி பேசுகிறார் மோடி.1974-ல் திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் கலைஞர் சட்டமன்றத்தில் கச்சதீவை கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் போட்டார். தீர்மானம் போட்டது மட்டுமல்லாமல் திமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கூட்டங்களில் பேசியவர்களில் நானும் ஒருவன். இந்த வரலாறு எல்லாம் அவர்களுக்கு தெரியவில்லை.

50 வருடம் ஆகிவிட்டது ஆகையால் எந்த பொய்யை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில், தோல்வி பயத்தின் காரணமாக இப்பொழுது கலர் கலராக பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நான் கேட்கிறேன் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தாரே இதே இலங்கை தமிழ் இனத்தை அழிக்க நினைத்ததன் விளைவு பிச்சைக்கார நாடாகவே ஆகி விட்டார்கள். பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்ற இலங்கைக்கு பிச்சை போட்டவர்தான் பிரதமர். இந்தியாவின் பணம் ஏறத்தாழ  34,000 கோடி ரூபாயை இலங்கைக்கு கொடுத்திருக்கிறார். அப்பொழுது கேட்டு வாங்கி இருக்கலாம் அல்லவா கச்சதீவை'' என்றார்.

Next Story

'அதன் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?'-பாமக ராமதாஸ் கேள்வி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'What's the secret? Will M.K.Stalin explain?'-pmk Ramadoss question

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக, கச்சத்தீவு விஷயத்தில் காங்கிரஸ் செய்தது துரோகம் என விமர்சனம் செய்துள்ளது

இதுகுறித்து பாமகவின் நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த  கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது  மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த  நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன்  விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால்  கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும்  கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது  தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர், தெரிந்தே அனுமதித்தார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்த போது கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தான். கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி இலங்கையிலும், 28 ஆம் தேதி தில்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதற்காக , கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு அடுத்த நாள் 29.06.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் 21.08.1974 அன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன. அப்போதைய கலைஞர் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை மத்திய அரசிடம் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் கலைஞர் அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்கு பயந்து தான் கலைஞர் மவுனமாக இருந்துவிட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை இப்போதும் மறுக்க முடியாது.

இலங்கைக்கு கச்சத்தீவு  தாரைவார்க்கப்பட்டதை  காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார்.  ஆனால், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் திமுக கூறுகிறது. இந்த சிக்கலில் திமுக மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.  

நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது, கல்வி உள்ளிட்ட மாநில அரசுப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் காங்கிரஸ் அரசால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது,  ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள்  இலங்கையில் படுகொலை செய்யப்பட்டது என பல விவகாரங்களில்  திமுக - காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின்  உச்சமாகவே உள்ளன.  ஆனாலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரசுடன் திமுக இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?' என தெரிவிக்கப்பட்டுள்ளது.