Skip to main content

நாட்டிய கலைஞர் வெளியேற்றம்... ஸ்ரீரங்கம் கோவிலில் சர்ச்சை!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

 Dance artist released ... Incident in Sri Rangam temple!

 

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து மதத்தைக் காரணம் காட்டி தான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக பரதநாட்டிய கலைஞர் தெரிவித்துள்ளது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

 Dance artist released ... Incident in Sri Rangam temple!

 

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். பரதநாட்டிய கலைஞரான இவர், நடனத்திற்காக தமிழ்நாடு அரசின் பாராட்டைப் பெற்றவர். மேலும், கோவிலில் பரதநாட்டியம் அரங்கேற்றமும் செய்துள்ளார். இஸ்லாம் மதத்தில் பிறந்திருந்தாலும் வைணவத்தை ஏற்று எப்பொழுதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், அண்மையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்ற ஜாகீர் உசேனை ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வெளியே போகச் சொல்லி ஆபாசமாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. கோவில் வாயில்வரை அவரை திட்டிக்கொண்டே அந்த நபர் அவரை வெளியேற்றினார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து ஜாகீர் உசேன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ''கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு பலகை பழைய நடைமுறை. மத நல்லிணக்கத்தைக் காக்கும் வகையில் இறை நம்பிக்கை உள்ளவர்களை அனுமதிக்க வேண்டும். நான் பெருமையாகச் சொல்வேன், இஸ்லாமில் பிறந்து வைணவத்தை ஏற்றாலும் இஸ்லாமைச் சேர்ந்தவர்களாலோ அல்லது இந்துக்களாலோ எந்த மிரட்டலும் இதுவரை வந்ததில்லை. இந்த சர்ச்சைக்குப் பிறகு கூட வரவில்லை. நான் பெருமாளை சேவிக்க உள்ளே போன உடனே, ‘நீ எப்படி உள்ள வரலாம்.... ' எனச் சொல்லமுடியாத வார்த்தைகளால் கிளி மண்டபத்திலிருந்து வெளியே வரை திட்டி வெளியே அனுப்பினார்'' என்றார்.

 

 Dance artist released ... Incident in Sri Rangam temple!

 

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.