Skip to main content

ஆய்வகத்தில் இருந்த அமிலத்தால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

cuddalore chidambaram aided school student lab incident he admitted in icu 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல் சத்தார் மகன் முகமது பாரூக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது பள்ளி வகுப்பறையில் மின்விசிறி பழுதானதால் ஆசிரியர் மாணவர்களை அருகில் உள்ள ஆய்வகத்தில் அமர வைத்துள்ளார். அப்போது மாணவன் தொடையில் ஏதோ அமிலம் பட்டு அரிப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் ஒருவர் மாணவனைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டு வரக் கூறியுள்ளார்.

 

இதை தொடர்ந்து அவர் வகுப்பில் இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்றபோது மாலை 6 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனடியாக மாணவனை சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவனின் உடலில் பட்ட அமிலமானது சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் கலந்துள்ளதாகத் தெரிவித்ததோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் கூறுகையில், "மாணவன் வகுப்பறையில் அமிலம் பட்டு எரிச்சல் ஏற்பட்டுள்ளது எனக் கூறியவுடன் ஆசிரியர் தண்ணீரைக் கொண்டு கழுவி விட்டு வரக் கூறியுள்ளார். பின்னர் மாணவனும் கழுவி விட்டு, தொடர்ந்து இரண்டு பாட வகுப்புகளைக் கவனித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த தகவல் கேள்விப்பட்டு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் 2 நாட்களாக மருத்துவமனையில் உள்ளோம்" என்றார்.

 

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கடலூர் மண்டல செயலாளருமான ஹமீத் பரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளியில் சரியான பராமரிப்பு செய்யப்படுகிறதா எனக் கவனம் செலுத்தாத நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே இந்த சம்பவத்திற்கு காரணம். மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்குப் போராடி வரும் மாணவனின் உயிரைக் காப்பாற்ற உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.