Skip to main content

கரோனா பரவல்: மீன் மார்க்கெட்டை மூடி வியாபார நலச் சங்கம் அறிவிப்பு..! 

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

Corona spread; Business Welfare Association announces closure of fish market ..!

 

தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டு நடைமுறையிலும் உள்ளது. அதேவேளையில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 

 

இந்நிலையில், கரோனா பரவலை மனதில் கொண்டு மேலும் அதனைப் பரவவிடாமல் இருக்க, திருச்சி மாவட்ட மீன் மொத்த வியாபார நலச் சங்கம் சார்பில் நேற்று (19.05.2021) வெளியிட்ட அறிக்கையில், திருச்சி காசிவிளங்கி சந்தை முழுவதுமாக அடுத்த 10 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Corona spread; Business Welfare Association announces closure of fish market ..!

 

அதனைத் தொடர்ந்து இன்றுமுதல் 30ஆம் தேதிவரை தொடர்ந்து 10 நாட்களுக்கு மீன் மார்க்கெட் முழுமையாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  மொத்த வியாபாரிகள் வேறு எந்த இடத்திலும் மீன் விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறி வேறு இடங்களில் மொத்த வியாபாரம் செய்தால் சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பினால், மீன் விற்பனையாளர்களுக்கு இந்தப் பத்து நாட்களில் சுமார் 4 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.