Skip to main content

தொடர் மழை; ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

 continuous rain; Only one district has holidays for schools

 

'மாண்டஸ்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி வரை 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்திருக்கிறது.

 

முன்னதாக தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் தாலுகாவில் பள்ளிகளுக்கும் அதேபோல் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்