Skip to main content

அரசுப் பேருந்தில் பெண்ணுக்கு தொல்லை; தட்டிக்கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Conductor assaulted for warning for misbehaving with girl
கோப்புக்காட்சி 

 

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த முருகபாண்டியன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் உசிலம்பட்டி கிளை பேருந்து பணிமனையில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். அவருடன் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். கடந்த 19 ஆம் தேதி பாபநாசத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் முருகபாண்டியனும் பாண்டியும் பணியிலிருந்தனர்.

 

அந்தப் பேருந்தில் ராஜபாளையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசியபடி சில்மிஷத்தில் ஈடுபட, அந்தப் பெண் கூச்சலிட்டிருக்கிறார். அந்த நபரிடம் நடத்துநர் முருகபாண்டியன், “உனக்கு என்ன பிரச்சனை? எங்கே போகணும்? மொதல்ல டிக்கட்  எடு..” என்று கூற, “அதெல்லாம் டிக்கட் எடுக்க முடியாது. நான் என்ன செய்தாலும் நீ என்னை கண்டுக்காத..” என்று அந்த நபர் பிரச்சனை செய்திருக்கிறார். 

 

இதனைத் தொடர்ந்து, நடத்துநர், ஓட்டுநர் மற்றும் சில பயணிகள் அந்த நபரை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டனர். அந்தப் பேருந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது, அந்த போதை நபரும் இன்னொரு நபரும் டூவீலரில் வந்து பேருந்தை மறித்திருக்கின்றனர். மற்றொரு டூவீலரில் வந்த 3 பேரும் சேர்ந்துகொண்டு 5 பேரும் பேருந்தில் ஏறி நடத்துநர் முருகபாண்டியனை மாறி மாறி அடித்ததோடு, பேருந்திலிருந்து கீழே இறக்கியிருக்கின்றனர்.

 

ஓட்டுநர் பாண்டியும் சில பயணிகளும் பேருந்திலிருந்து கீழே இறங்கி, நடத்துநர் முருகபாண்டியனைத் தாக்கிய நபர்களைச் சத்தம் போட்டுள்ளனர். அந்த நிலையிலும் அவர்கள் முருகபாண்டியனைப் பார்த்து “இன்னைக்கு நீ தப்பிச்சிட்ட. இனிமே நீ இந்த  ஏரியா பக்கம் வரமுடியாது. உன்னை கொல்லாம விடமாட்டோம்..” என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, நடத்துநர் முருகபாண்டியன் அளித்த புகாரின் பேரில் சக்திவேல், பாண்டியன், முருகன், முருகானந்தம், மாரிமுத்து ஆகிய 5 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.