Published on 05/05/2018 | Edited on 05/05/2018
![rajini eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/mFYpvexMIkBLbmYETpWT-pMa7-lgFToh4816zBKnC2o/1533347672/sites/default/files/inline-images/rajini%20eps.jpg)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கும் இன்று இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மிரட்டல் விடு்த்தவர் கடலூரைச்சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்ய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.