Skip to main content

சேதுபாவாசத்திரம் அருகே பாம்பு கடித்து விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு!

Published on 12/01/2018 | Edited on 12/01/2018
சேதுபாவாசத்திரம் அருகே பாம்பு கடித்து விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு! 

சேதுபாவாசத்திரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அக்கம்பக்கத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேதுபாவாசத்திரம் அடுத்த அம்மணிசத்திரம் கிழக்கு கடற்கரைச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாத்தையன். இவரது மனைவி பசுபதி (வயது 47). விவசாய கூலித் தொழிலாளி. கடந்த டிசம்பர் 30 ந்தேதி இரவு வீட்டின் கொல்லைப்புறமாக சென்ற பசுபதியை விஷப்பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக உறவினர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பசுபதியைக் கொண்டுசென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசுபதி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

இறந்துபோன பசுபதிக்கு திருமண வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்