Skip to main content

‘காசு கொடுத்தால் கை மேல் அரசு வேலை’ - மோசடி செய்த மத்திய அரசு அதிகாரி

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 central government officer who cheated a youth by claiming to get a government job

 

"அந்த பணத்த என்கிட்ட கொடுங்க... உங்களுக்கு நா வேல வாங்கி தர்றேன், அதுவும் அரசாங்க வேல" என பொய் சொல்லி பணத்தை மோசடி செய்த மத்திய அரசு அதிகாரியின் செயல் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு இவரது நண்பர் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பிரசாந்த் உத்தமன் மத்திய அரசின் Hindustan scout and guides state chief commisioner பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில், பிரசாந்த் உத்தமன் ராஜேஷ்குமாரிடம் கோவை என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள மத்திய அரசின் Hindustan scout and guides-இல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும், அந்த பணத்தையும் பெற்றுக்கொண்ட பிரசாந்த் உத்தமன் அதற்கான பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.

 

இதையடுத்து, ராஜேஷ்குமார் அந்தப் பணி ஆணையை எடுத்துக்கொண்டு பணியில் சேரச் சென்றபோது அது போலியான பணி ஆணை என்பது தெரிய வந்துள்ளது. அப்போது, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார், தன்னிடம் பணம் வாங்கிய உத்தமனிடம் இந்த போலி பணி ஆணை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டு வந்துள்ளார். ஆனால், அந்த பிரசாந்த் உத்தமனோ எந்தவித விளக்கமும் அளிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ராஜேஷ்குமார், பிரசாந்த் உத்தமன் மீது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பிரசாந்த் உத்தமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்  இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அதே சமயம், ஏற்கனவே பிரசாந்த் உத்தமன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்ற கார் மெக்கானிக் ஒருவரிடம் இதே வேலை வாங்கித் தருவதாகக் கூறி 9 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி ஆணையை வழங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கும் இதே காவல் நிலையத்தில் தான் பதியப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.