Skip to main content

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள் - தமாகா யுவராஜ் பேச்சு!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020


சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஞாயமான முறையில் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் குறுகிய காலத்தில் சின்னத்தை பெற்று 75 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தர்மத்தை மீறி தமாக வேட்பாளர்கள் போட்டியிடும் இடத்தில் அவர்களும் போட்டியிட்டுள்ளனர். இதுகுறித்து தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். இதுபோன்ற நடவடிக்கையை தவிர்த்திருந்தால் தமாக இன்னும் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கும். திமுக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத வகையில் அனைத்து வேலைகளையும் செய்தது. தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 50 சதவீதமான வெற்றியை மட்டும் பெற்றுள்ளது குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. குழப்பம் ஏற்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.



தமிழக அரசு பொங்கலுக்கு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் நேரத்தில் வெளியூர்களுக்கு செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும், இதனை சமாளிக்க 20 சதவீத பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. பல அறிஞர்களை உருவாக்கிய ஜே என் யூ பல்கலைகழகம் தற்போது தவறான வழிகாட்டுதலால் தேசத் துரோகிகளை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டினார். இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் பல பொருட்களில் ஜிஎஸ்டி வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க தமாகா வலியுறுத்தும். இவருடன் கட்சியின் மாநில பொது செயலாளர் வேல்முருகன், மாநில துணைத்தலைவர் அருணேஸ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ், துணை செயலாளர்கள் ராஜா சம்பத், வைத்தி, ஜெமினி ராதா, நகர தலைவர் மக்கின், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கணேஷ், சாய் முரளி, ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

என். ஐ.ஏ அதிரடி சோதனை; பென்டிரைவ், செல்போன்கள் பறிமுதல்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 N. AI Action Test; Confiscation of pen drives, cell phones

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனையில் நடைபெற்ற வருகிறது. அதேபோல ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'நானும் மைதானத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்'-நடராஜன் நெகிழ்ச்சி

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 'I felt like I was on the field too' - Natarajan

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதிய இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பார்படாசில் நடந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் சாலையில் கூடி நின்று பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டுக்குப் பின் ஐசிசி தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகேந்திர சிங் தோனி, 'போட்டியில் இதயத்துடிப்பு எகிறிய போதும் வீரர்கள் நம்பிக்கை உடன் செயல்பட்டனர். இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது என அணி வீரர்களுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார். கடைசி வரை பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 'I felt like I was on the field too' - Natarajan

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'ஒவ்வொரு தருணமும் மிக முக்கியமாக இருந்தது. நானும் மைதானத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது' என தெரிவித்துள்ளார்.