Skip to main content

பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட குறவர் சமூக குடும்பம் - குமரியில் மற்றுமொரு நடத்துநரின் மனிதாபிமானமற்ற செயல்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

The bus driver who dropped the narcissist family half way!

 

கன்னியாகுமரியில் மீனவ பெண் ஒருவர், பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பமே பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கன்னியாகுமரியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவரான செல்வமேரி பாட்டியின் அழுகுரல் இன்னும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அதற்குள் அதே மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த முதியவர் பெண் மற்றும் சிறுமி ஆகியோர் பயணித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அவர்களது உடைமைகளைப் பேருந்தில் இருந்து சாலையில் வீசி எறிந்த நடத்துநர், அநாகரிகமான தகாத வார்த்தைகளால் திட்டிய படியே சிறுமியை முதலில் சிறுமியை இறக்கிவிட்டுள்ளார். பின்னர், முதியவரும், பெண்ணும் வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். 

 

கடந்த சில நாட்களுக்கு முன் மீனவ பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு முதலமைச்சரே கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர், நடத்துநர், நேர காப்பாளர் ஆகியோர் மீது பணி இடை நீக்கம் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனாலும், இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனிடையே, சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து போக்குவரத்துத்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.