Skip to main content

ரத்த தானம் வழங்கிய போலீசார் (படங்கள்)

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 20,000 போலீசார் ரத்ததானம் செய்கின்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சுமார் 2 ஆயிரம் போலீசார் இரத்த தானம் செய்கின்றனர்.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்