Skip to main content

லிப்ட் கேட்டு வந்த இளைஞரிடம் செயின் பறிக்க முயற்சி... விருத்தாசலத்தில் துணிகரம்!

Published on 16/06/2022 | Edited on 17/06/2022

 

 Attempt to snatch the chain from the young man who asked for the lift ... Venture at Vriddhachalam

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் பாலாஜி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் விருத்தாசலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த, ஆத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். லிப்ட் கொடுத்த பாலாஜி, ஜெயக்குமாருடன் ஒன்றாக, விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ஏனாதிமேடு பகுதியை வந்தடைந்ததும், கார்குடல் செல்வதாக கூறி, இறங்கி கொள்ளுங்கள் என பாலாஜி கூறியுள்ளார். அதனால் வாகனத்தை விட்டு இறங்கிய ஜெயக்குமார் நடந்து செல்ல முற்படும் போது, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை பாலாஜி பறிக்க முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்த ஜெயக்குமார், இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டு பாலாஜியை இறுக்க கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார். உடனடியாக விருத்தாச்சலம் புறவழிச் சாலைக்கு வந்த ஜெயக்குமாரின் நண்பர்கள் பாலாஜியை தர்ம அடி அடித்ததாக கூறப்படுகிறது.

 

பின்னர் விருத்தாச்சலம் காவல்துறையினரிடம் பாலாஜியை ஒப்படைத்தனர்.  காவல்துறையினர் அவரை கைது செய்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்து, மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

முதற்கட்ட விசாரணையில் பாலாஜி  தொடர்ச்சியாக ஆன்லைன் Application மூலம் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளதாகவும், அதனை திருப்பிக் கட்ட முடியாததால், பணம் கொடுத்த ஆன்லைன் நிறுவனம் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்ததால் அப்பணத்தை திருப்பி கட்டுவதற்காக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகிறது. தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நூதன முறையில் ஆன்லைன் அப்ளிகேஷன் மூலமாக பணம் கொடுத்து, மிரட்டுவதும், புகைப்படத்தை சித்திரிப்பு செய்து இணையதளத்தில் அனுப்புவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.