Skip to main content

அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவு...ஆதங்கத்தில் விவசாயிகள்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Arbitrary decision of the authorities...! - Farmers in panic!

 

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 26ஆம் தேதி திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார்கள். அப்போது கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் தலைவர் காசியண்ணன் தலைமையில் வந்த விவசாயிகள் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர். 

 

பிறகு அவர் கூறும்போது, தற்போது கீழ்பவானி பாசன பகுதியில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அது இன்று 25 ந் தேதி முதல் முறை வைத்து நீர் வழங்க முடிசெய்யப் பட்டுள்ளதாக அறிகிறோம். பாசன விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். பவானிசாகர் அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையிலும் மேல் பகுதியிலேயே நெல் நடவு வேலைகள் முடிவு பெறாத நிலையிலும் முறை வைத்து நீர் வழங்குவது தவறான முடிவாகும். இதை கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சார்பில் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக முறை வைத்து நீர் வழங்குவதை அமல் படுத்தாமல் எல்லா மதகுகளுக்கும் உரிய நீரை முழுமையாக வழங்கி விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்றனர்.

 

இதேபோல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் பட்டின மக்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக் கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோஷம் எழுப்பியவாறு வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், கோஷம் போடாமல் உங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை ஆட்சியரிடம் கொடுங்கள் என்றனர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர். 

 

இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த மாக்கினாங்குகோம்பை, அரசூர், தட்டாம்புதூர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம், அருணாச்சலம் உள்பட 12 பேர் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது; “அரசூர் ராஜவீதியில் குடியிருக்கும் ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் நாங்கள் பல தவணைகளாக 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளோம். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நபர் எலச்சீட்டு பணத்தை எங்களுக்கு தராமல் காலம் தழ்த்தி வருகிறார். இதற்காக நாங்கள் கடன் வாங்கி அவரிடம் பணத்தை கொடுத்தோம். அவர் கூறியபடி பணம் தராததால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.