Skip to main content

திருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

அழகிரி தனது அடுத்தஅரசியல்நிகழ்வாக இடைத்தேர்தல் நடக்க இருக்கும் திருவாரூருக்கு நாளை 23ம் தேதி வருகிறார்.  அதற்கான ஏற்பாடுகளை தனது ஆதரவாளர்கள் சிலர் கவனித்துவருகின்றனர். அழகிரியின் வருகை பலரையும் ஆச்சர்யத்துடன் கூடிய எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

 

alagiri

 

நாளை திருவாரூர் வரவிருக்கும் அழகிரி காட்டூரில் இருக்கும் தனது பாட்டியின் சமாதிக்கு சென்று மறியாதை செய்கிறார். பிறகு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செய்துவிட்டு தெற்கு வீதியில் இருக்கும் ஏகேஎம் திருமணமண்டபத்தில் தனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன் பி்ன்னர் அங்கு தனது ஆதரவாளர்களை தனிமையில் சந்தித்து பேசுகிறார். அங்கு தனக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ஆதரவை பொறுத்தே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்கிற முடிவில் இறங்க இருக்கிறாராம்.

 

திமுக தலைவர் கலைஞரின் சொந்த தொகுதியனா திருவாரூர் அவர் மறைவையடுத்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட மு.க.அழகிரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவிக்கிடந்தன. கலைஞர் உயிரோடு இருக்கும்வரை திருவாரூருக்கு வராத அழகிரியின் திடிர்வருகையின் மூலம் அந்தபேச்சுக்கு முற்றுப்புள்ளிவைக்க இருக்கிறது.

 

கலைஞரின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை கடந்த  2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எத்தனையோ முறை அழகிரி முயன்றும் மீண்டும்அவரால் திமுகவில் இணையமுடியவில்லை.
   
கடந்தமாதம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புகாரணமாக கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் வேகவேகமாக சென்னைக்கு வந்தார்.  கலைஞரின்  இறுதிநிகழ்ச்சிவரை ஸ்டாலினோடு இனைந்தே ஒவ்வொருநிகழ்விலும் இருந்தார்.பிறகு கலைஞர்இறந்தமூன்றாவதுநாளே திமுகதொண்டர்கள் அனைவரும் எனக்கு பின்னால்இருக்கிறார்கள் என ஒருபோடுபோட்டார். 


அதோடு நிற்காமல் செப்டம்பர் 5 ம்தேதி சென்னையில் தனது ஆதர்வாளர்களோடு ஊர்வலம் போவதாக அறிவித்து அதில் 1 லட்சம் பேர் கலந்துகொள்ளுவார்கள் என அறிவித்து, ஊர்வலத்திற்கு சொன்ன அளவில் கூட்டத்தை காட்டாமல் புசுவானமாகினார்.


பிறகு தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் தயாராக இல்லை. இந்த சூழலில்  28 ஆம் தேதி   திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின்  தலைவரானார் ஸ்டாலின். அதனை தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கும், கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்றுவிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுவிட்டே சென்றிருக்கிறார். 

 

இதற்கிடையில் அழகிரி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அதற்கு டி.டி.வி தினகரனிடம் ஆதரவு கேட்டதாகவும் திருப்பரங்குன்றம் தொகுதியில்  டிடிவி அணியினருக்கு அழகிரி ஆதரவு அளிப்பதாகவும்,   செய்திபரவிக்கிடக்கின்றன. இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் திருவாரூர் தொகுதியில் தனக்கு உள்ள செல்வாக்கு எப்படி என்பது  குறித்து அறிந்து கொள்ளவே அழகிரி  வருகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

அவரது ஆதரவாளர் ஒருவரிடம் விசாரித்தோம், ‘’ எங்களுக்கு தனிப்பட்ட ஆதரவு என்பது குறைவுதான். நன்னிலம் பகுதியில் திமுக மா.செ பூண்டிகலைவாணன் மீது உள்ள அதிர்ப்தியால் சிலர் உள்ளனர்.  அவர்களைதான் சென்னையில் நடந்த ஊர்வலத்திற்கும் பஸ் பிடித்து அழைத்து சென்றோம், அவர்களை தான் அழகிரி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கும் அழைத்துவரவுள்ளோம், அழகிரியும் ஸ்டாலினும் ஒன்றாகவேண்டும் என்கிற கோரிக்கையைதான் அவரிடம் வைக்க இருக்கிறோம். ’’என்றனர். எது எப்படியோ திருவாரூரிலும் அழகிரியின் சாயம் வெளுக்க போகிறது என்கிறார்கள் திமுகவினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.