Skip to main content

மாஜி அமைச்சரின் குருபூசை நாளில் ஆர்ப்பாட்டமா? தேதியை மாற்ற ர.ரக்கள் கோரிக்கை

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

AIADMK  members demand to change Arpattam date

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், மாஜி அமைச்சருமான வடகாடு அ.வெங்கடாசலம் கடந்த 2010 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதிமுகவில் ஆளுமையாக இருந்த மாஜி அமைச்சர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்கள் வரை போக்குவரத்து முடங்கியது. 

 

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாஜி அமைச்சர் அ.வெங்கடாசலம் உடல் அடக்கம் செய்யப்பட்ட அக்டோபர் 7 ந் தேதி குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அன்னதானம், ரத்ததானம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுவதுடன் கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ உள்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் தவறாமல் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திச் செல்வார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களில் வந்து குருபூசையில் பங்கேற்று செல்வர்.

 

அதே போல இந்த ஆண்டும் 7 ஆம் தேதி சனிக்கிழமை ஏராளமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துள்ளனர். தேர்தல் வர உள்ளதால் இந்த ஆண்டு அரசியல் கட்சி நிர்வாகிகள் மேலும் கூடுதலாக வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ கட்டமைப்புகள் இல்லை அதனை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் 7 ந் தேதி மதியம் மா.செ, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பைப் பார்த்த புதுக்கோட்டை மாவட்ட ர.ரக்கள், மாஜி அமைச்சர் வெங்கடாசலம் குருபூசை நாளில் கறம்பக்குடி ஆர்ப்பாட்டம் நடத்துவதால் இரு நிகழ்வுகளிலும் கட்சிக்காரர்கள் பங்கேற்பது சிரமமாக இருக்கும். அதனால் ஆர்ப்பாட்டத் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு பலர் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் அதிமுக வில் வெங்கடாசலம் பலமாக இருந்து மறைந்துள்ளார். அவரது நினைவிடத்தில் முதலமைச்சராக இருந்த போது எடப்பாடியாரும் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். இப்படி ஒரு மதிக்கத்தக்க தலைவரின் குருபூசை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தும் தேதியை மாற்றி அமைத்தால் இரு நிகழ்வுகளில் அதிமுக வினர் ஏராளம் கலந்து கொள்வார்கள் என்று அந்த மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர். ர.ர க்களின் இந்த கோரிக்கை மனுக்களுக்கு அதிமுக தலைமை மதிப்பு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.