Published on 23/10/2021 | Edited on 23/10/2021

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை சூளைமேட்டில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானுக்கு சொந்தமான வீட்டிற்குச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அவர் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியதாகப் புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி 2,400 சதுர அடி கொண்ட நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல்வைத்துச் சென்றனர்.