Skip to main content

“தேர்தல் வாக்குறுதிகளில் 208 நிறைவேற்றம்..” - அமைச்சர் சக்கரபாணி

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

“208 fulfillment of election promises..” - Minister Chakrapani

 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, கள்ளிமந்தயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்தச் சிறப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமைத் தாங்கினார். இவ்விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு 2607 பயனாளிகளுக்கு ரூ.564.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தமிழக முதல்வர் இதுவரை 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 14 மாதங்களில் தமிழகத்தில் இதுவரை 12.17 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 

 

“208 fulfillment of election promises..” - Minister Chakrapani

 

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயக் கடன், சிறு வணிகக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன் என பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் திட்டங்களின் கீழ், வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 10 ஆண்டுகளில் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாக மாற்றும் வகையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். 

 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி இருக்கிறார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆதி திராவிட நலத்துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அரசு மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ அந்த வகையில் செய்துகொண்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் ஏழு சட்டமன்ற தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது. 

 

“208 fulfillment of election promises..” - Minister Chakrapani

 

இன்று 2607 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிப்பறை, கல்வி, பேருந்து, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை போன்ற பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற வகையில் ஆட்சி செய்து வருகிறார்.

 

ஒட்டன்சத்திரம் தொகுதியில் பிற்படுத்தப்பட்ட 175 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்கு 130 பயனாளிகளுக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். தொகுதி முழுவதும் இருக்கின்ற ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டு வருகிறது. 

 

ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து கலைஞர் பொற்கால ஆட்சியை நடத்தினார். அதுபோல் தற்போதைய தமிழக முதல்வரும் பொற்கால ஆட்சி நடத்திவருகிறார். தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின்பு ஒட்டன்சத்திரம் தொகுதி பரப்பலாறு அணை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு அரசாணை வெளியிடப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று பரப்பலாறு அணை தூர்வாரப்படும். விவசாயிகள் பொருட்கள் வைப்பதற்கு ரூ.5 கோடி மதிப்பில் குளிர்சாதன அறை கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. 

 

“208 fulfillment of election promises..” - Minister Chakrapani

 

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் பத்து ஏக்கர் நிலப் பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.20 கோடி மதிப்பீட்டில் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. பழனியில் சித்தா கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன் சித்தா கல்லூரி நிறுவப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் கூட்டுறவுத் துறையின் மூலம் மன்னவனூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்திலேயே 11 இடங்களில் தொழில் பயிற்சி துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்த ஆண்டு தொழில் பயிற்சி துவங்கப்படவுள்ளது. 


பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு வேலைக்கு ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதுபோல் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.