Skip to main content

ஸ்டாலினை அழைப்பது சொந்தக் காசில் சூனியம் வைப்பது போல!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

நாடாளுமன்றத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்களுக்கெல்லாம் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை.

 

stalin modi


அவருக்கு அழைப்பு விடுக்காததால் திமுக எம்.பி.க்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்பதை தவிர்த்திருக்கிறார்கள். பாஜகவின் இந்த முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும்?

வேறு என்ன..? தனக்குக் கிடைத்த பிரமாண்டமான வெற்றியின் பெருமிதத்தை காவுகொடுக்க வேண்டியிருக்குமோ என்பதுதான் காரணம். ஒருவேளை ஸ்டாலினுக்கு அழைப்புக் கொடுத்திருந்தால் விழாவின் லைம்லைட் ஸ்டாலின் மீதுதானே விழுந்திருக்கும்? தென் மாநிலத்தில் பாஜகவை துடைத்தெறிந்த கூட்டணியின் தலைவர் என்று ஸ்டாலினுக்கு மீடியாக்கள் வர்ணனை கொடுத்திருக்கும். அது உலகம் முழுவதும் பரவியிருக்கும்.

ஸ்டாலின் வெறுமனே ஒரு கட்சித் தலைவர் மட்டுமல்ல. தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அந்த வகையிலேனும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

 

 

stalin modi



ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தால், அவர் பங்கேற்றால் பாஜக பெற்ற மிகப்பெரிய வெற்றி கொஞ்சமேனும் திசைதிருப்பப்படும். மோடியை முதன்முதலில் சேடிஸ்ட் மோடி என்றும், பாசிஸ்ட் மோடி என்றும் பட்டம் சூட்டி, அதுவே ஹேஸ்டேக் ஆகி ட்ரெண்டானதை மோடி மறக்கவில்லை என்கிறார்கள் திமுகவினர்.

கோபேக் மோடி என்ற ஹேஸ் டேக்கும், கருப்புக்கொடி போராட்டமும், சாலைப் பயணத்தை தவிர்த்து காம்பவுண்ட் சுவரையெல்லாம் இடித்து பயணம் செய்த அவலமும் மோடியை கடுப்பேற்றியிருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

தென்னிந்தியாவில் பாஜக எதிர்ப்பை வலுப்படுத்தியதில் ஸ்டாலினின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்ததால்தான், ஸ்டாலினைப் பார்த்தால் அவருக்கு பழசெல்லாம் நினைவு வரும் என்பதால்தான் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்று டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.