Skip to main content

“வடக்கிலிருந்து தெற்கு வரை வளர்ந்துள்ளோம்” - பிரதமர் மோடி

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

"We have grown from North to South" - PM Modi

 

டெல்லியில் பாஜகவின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின் விழாவில் பேசிய மோடி, “1984 ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் துவங்கிய பயணம், 2019 ஆம் ஆண்டு 303 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாக பாஜக வளர்ந்திருக்கிறது. பல மாநிலங்களில் 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளோம். கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை ஒரே பான் இந்தியா கட்சி பாஜக மட்டுமே. உலகின் ஒரே கட்சியாக மட்டுமின்றி எதிர்காலம் கொண்ட கட்சியாகவும் பாஜக உள்ளது.

 

வளர்ந்த மற்றும் நவீன இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் ஒரே நோக்கம். போட்டியாளர்களின் குறைகளை ஆராய்வதற்கு பதிலாக, மக்களிடத்தில் நேரடியாக களமாடியதால் இந்த வெற்றி நமக்கு கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் மீது இவ்வளவு நடவடிக்கைகளை எடுப்பது இதுவே முதல்முறை. பாஜக ஆட்சியில் பொருளாதார குற்ற வழக்குகளில், 1 லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளை காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் ஒரே மேடையில் ஒன்று திரண்டுள்ளன. புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை சிதைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு வலுவான அடித்தளம் அமைத்திருக்கிறோம். அதனால் தான் அரசியலமைப்பு சட்டங்கள் மீது வீண் பழி சுமத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.