Skip to main content

எதுக்கு கருத்து சொல்லணும்... திமுக ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறாரா? கோபமான ஸ்டாலின்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான உரசலில் சமாதானம் எட்டப்பட்டாலும் இன்னும் முழுமையாக  இருதரப்புக்கு இடையிலேயும் பரபரப்பு அடங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான உரசல், சோனியாவின் முயற்சியால் சமாதானமானது. சமாதான முயற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் தி.முக. பொருளாளரான துரைமுருகன், கூட்டணி உறவு முறிந்தால் எங்க கட்சிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்று கூறியது மறுபடியும் காங்கிரஸ் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 

dmk



இந்த நிலையில், தன் லைனில் வந்த துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த் எம்.பி.யிடம், கூட்டணிக்கட்சி பற்றி பொது வெளியில் உங்க அப்பா எதுக்கு கருத்துச் சொல்லணும். தி.மு.க. இனி ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு அவர் நினைக்கிறாரா?ன்னு ஸ்டாலின் தன் கோபத்தைக் காட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் லைனுக்குப் போன துரைமுருகன், நான் காங்கிரஸை வேண்டும் என்றே விமர்சிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் எடக்கு மடக்காகக் கேள்வி எழுப்பியதால், அவர்களுக்கு நான் சொன்ன தமாஷ் பதிலை அவர்கள் சீரியஸாக்கிவிட்டார்கள் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.


மேலும் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி, "எங்கள் கட்சியில் இருக்கும் அத்தனை பேருமே முதலமைச்சர் தான் என்று பேசியதை விமர்சனம் செய்த அவர், அப்படியென்றால், முதல்வர் பதவியை ஓ.பி.எஸ்.சிடம் கொடுக்கட்டும் என்று கூறி எடப்பாடித் தரப்பையே அதிர வைத்து விட்டார். இருந்தும் இந்தச் சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்களுக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவரை தி.மு.க. தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது. இதுதான் கூட்டணி தர்மமா?ன்னு இப்போது மீண்டும் காங்கிரஸ் தரப்பில் முணுமுணுப்பு எழுந்திருக்கு. இரு தரப்புக்கும் இடையில் மழை விட்டாலும் தூவானம் விடலை என்று கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.