Skip to main content

“வாக்குகளை தாமரைக்கு தாருங்கள் வாழ்வீர்கள் நீங்கள்... வாழவைப்பேன் நான்” பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

பாராளுமன்ற தோ்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் நேற்று மாலை முடிவடைந்தது. இதில் இருமுனை போட்டி நிலவும்  கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தொண்டர்களுடன் செட்டிக்குளம் மைதானத்தில் இருந்து தொண்டர்களுடன் ஊா்வலமாக வந்து நாகர்கோவில் மணிமேடையில் பிரச்சாரத்தை முடித்தார். 

 

pon rathakrishnan


அப்போது பொன். ராதாகிருஷ்ணன், “உங்க பிள்ளைகளை நான் தத்தெடுக்கிறேன். அவர்களுக்காகவே நான் வாழுவேன், வாக்குகளை தாமரைக்கு தாருங்கள் வாழ்வீர்கள் நீங்கள்... வாழவைப்பேன் நான்” என உருக்கமாக பேசினார்.
 


காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக பார்வதிபுரம் வழியாக வடசேரி வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
  

 

 

 

 

சார்ந்த செய்திகள்