Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலை... அதிமுகவிற்கு பின்னடைவு... அதிர்ச்சியில் அதிமுக வேட்பாளர்கள்!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான  உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என  2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் 5090 இடங்களில் திமுக பெரும்பான்மை இடங்களில் அதிமுகவை விட முன்னணியில் உள்ளது. அதே போல் மாவட்ட கவுன்சிலர் 515 இடங்களில் தற்போதைய நிலவரப்படி திமுக பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.  மதியம் 12.30 நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் பின்னடைவில் உள்ளனர். அதோடு, அதிமுக ஆட்சியில் இருந்தும், அதிக அளவு செலவு செய்தும் போதிய இடங்களில் அதிமுக முன்னிலை பெறாமல் இருப்பதால் வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். 


 

 

dmk



திருவாடானை- கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கவிதா வெற்றி.
 

விருதுநகர்- எரிச்சநத்தம் ஊராட்சி மன்ற தலைவர்  தேர்தலில்  முத்துப்பாண்டி வெற்றி.

சாத்தான்குளம்- கோமானேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்து வெற்றி.

ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி.

கன்னியாகுமரி-மங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ராஜன் வெற்றி. 

கும்பகோணம்- மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் புவனேஸ்வரி வெற்றி.

மதுரை-சக்கரப்பநாயக்கனுர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜான்சிராணி வெற்றி.

தஞ்சாவூர் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி.

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாசுகி வெற்றி.

தூத்துக்குடி- கரிசல்குளம் ஊராட்சியில் தலைவர் தேர்தலில் தங்கபாண்டியம்மாள் வெற்றி.

திண்டுக்கல்-நீலமலைக்கோட்டை ஊராட்சி தலைவர் தேர்தலில் ராதா வெற்றி. 

கும்பகோணம்- திருப்புறம்பியம் ஊராட்சி தலைவர் தேர்தலில் வைஜெயந்தி வெற்றி. 

திண்டுக்கல்-புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் லட்சுமி வெற்றி.

ஈரோடு-புங்கார் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ராஜேந்திரன் வெற்றி.

கன்னியாகுமரி-மருதூர்க்குறிச்சி ஊராட்சிதலைவர் தேர்தலில் செல்வராணி வெற்றி. 

விருதுநகர்- வத்திராயிருப்பு 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் வெற்றி.

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.