Skip to main content

அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல்; பாஜக தலைமையைச் சந்திக்கும் ஓ.பி.எஸ்.?

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

Erode by-elections in full swing; OPS to meet BJP leadership?

 

ஈரோடு இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக கட்சி உட்பூசலும் வலுவாக சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ம் தேதி மறைந்தார். இதன் பிறகு இத்தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டதோடு, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 

 

அ.தி.மு.க.வில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஓ.பி.எஸ். தயாராக இருந்த சூழ்நிலையில், ஈ.பி.எஸ். முழுமையாக மறுத்துவிட்டாராம். கொங்கு பெல்ட் ஈ.பி.எஸ். அதிமுக வசம் உள்ளதாலும், கொங்கு மக்களின் ஆதரவும் இருப்பதால், இரண்டு அணியாக பிரியும் பட்சத்தில் வேறு சின்னத்தில் நின்றாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுக நாங்கள்தான் என மக்கள் மத்தியில் நிலைநிறுத்த இந்த வாய்ப்பை ஈ.பி.எஸ். பயன்படுத்தவும் கணக்கு போட்டிருக்கிறாராம்.

 

அதிமுக இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த ஓ.பி.எஸ்.-சின் கையெழுத்தும் தேவைப்படுவதால், எப்படியும் ஈ.பி.எஸ். தரப்பிலிருந்து அழைப்பு வரும் அல்லது அதிமுக நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணிக்கு சீட் கொடுக்குமென ஓ.பி.எஸ். தரப்பில் எதிர்பார்த்த நிலையில், ஈ.பி.எஸ். அதிமுக நேரடிப் போட்டி என அறிவித்துள்ளது. 

 

இந்த அறிவிப்பு வெளியானதும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்குவது குறித்து ஓ.பி.எஸ். ஜன. 23-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளார். வரும் ஜன. 23ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கூட்ட ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு ஓ.பி.எஸ்.-சின் நிலைப்பாடு குறித்து தெரியவரும்.  

 

இரு அணிகளும் ஒன்றிணைந்தால் ஓ.பி.எஸ். தரப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிபோகும் வாய்ப்பும் இருக்கிறது. அதன் காரணமாக ஓ.பி.எஸ். அணி தனியாக நிற்கவே அவரின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுப்பார்கள் என்கின்றனர் அதிமுக அரசியலைத் தொடர்ந்து கவனிப்பவர்கள். 

 

இந்த சூழ்நிலையில், 23ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு பாஜக தலைமையைச் சந்திக்க ஓ.பி.எஸ். ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஓ.பி.எஸ். ஆரம்பத்தில் இருந்து மோடியின் வார்த்தைக்கு ஒத்துப்போன நிலையில், நிச்சயம் ஓ.பி.எஸ். - பாஜக கூட்டணி உருவாகும் என ஓ.பி.எஸ். தரப்பில் பேசப்படுகிறது. ஒன்று பா.ஜ.க. தாமரை சின்னத்தில் நின்றால் அதற்கு  ஓ.பி.எஸ். ஆதரவு கொடுப்பார். இல்லையென்றால் ஓ.பி.எஸ். தரப்பு களம் காணும் என்பதே ஓ.பி.எஸ். தரப்பு முடிவாக உள்ளதாம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.