Skip to main content

“தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட சதி நடக்கிறது” - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

cm Stalin alleged conspiracy remove the DMK government Tamil Nadu

 

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டி திமுக ஆட்சியைக் கலைக்கச் சதி நடக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறோம். சாதிக்கலவரம், மதக்கலவரத்தைத் தூண்டலாமா எனச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அப்படி கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை அகற்றச் சதி நடக்கிறது. நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்கள், திமுக ஆட்சிக்கு எதிராக வேண்டும் என்றே புழுதிவாரித் தூற்றுகின்றனர். தமிழ்நாட்டை மட்டுமல்ல, நாட்டையே நாம் காப்பாற்ற வேண்டும். இதற்கு இந்திய அளவில் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்