Skip to main content

தமிழக அரசிடமிருந்து தப்பிக்க இடம் மாறிய அமித்ஷா! பரபரப்பு பின்னணி! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

AmitSha Avadi visit secrete

 

அரசுமுறைப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு செல்வதற்காக 23-ந்தேதி இரவு சென்னை வந்தார். அவரது வருகையின்போது நடந்துள்ள இரண்டு சம்பவங்கள்தான் மாநில உளவுத்துறையினரால் உற்று நோக்கப்பட்டிருக்கின்றன.

 

கவர்னர் மாளிகையில் தங்காமல் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகையில் அமித்ஷா தங்கினார். இது குறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரி பயணம் முடிவானதுமே, டெல்லியிலிருந்து பெங்களூர் சென்று அங்கிருந்தபடி சென்னைக்கு வராமல் புதுச்சேரிக்கு செல்லலாம் என்றுதான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பெங்களூர் பயணம் கட் ஆனது. காரணம், தமிழக அரசியல் சூழல், ஆட்சி சூழல் இரண்டையும் தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் விவாதிக்க நினைத்தார் அமித்ஷா. சென்னையில் முதல்நாள் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் புதுச்சேரி செல்ல தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் ராஜ்பவனில் அமித்ஷா தங்குவது எனவும், அன்றைய தினம் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் ஆலோசிக்கவும் முடிவானது.


இதனை அறிந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஒன்றிய உள்துறைக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளனர். அதில், ’தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலும், மாநில காவல்துறை மற்றும் மாநில உளவுத் துறையின் பாதுகாப்பு கண்காணிப்பிலும் சென்னை ராஜ்பவன் இருக்கிறது. அதனால் அமித்ஷாவை மாநில உளவுத்துறையின் மூலம் தமிழக அரசு வேவு பார்க்கலாம். ராஜ்பவனில் தங்குவதை தவிர்க்கவும்’ என தகவல் தந்துள்ளனர். அதன்பிறகே, ராஜ்பவனை தவிர்த்து விட்டு மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவடி சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகையில் தங்குவது என முடிவானது” என்று ஆவடி ரகசியத்தை சுட்டிக்காட்டினார்கள்.


சென்னை விமானநிலையத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலரும் அமித்ஷாவை வரவேற்றனர். சால்வை கொடுத்த கராத்தே தியாகராஜனுடன் கையைப் பிடித்துக்கொண்டு அவர் பேசியதை சொன்ன விசயங்களை, உன்னிப்பாக கவனித்தார் அமித்ஷா.


இதனையடுத்து, அமித்ஷாவின் காரில் அண்ணாமலையும் சி.டி.ரவியும், அதற்கடுத்த காரில் கேசவ விநாயகம், அமைச்சர் முருகன், சுதாகர் ரெட்டியும் பயணித்தனர். ஆவடிக்கு சென்ற அமித்ஷா, விருந்தினர் மாளிகையில் மேற்கண்ட ஐவருடன் தி.மு.க. ஆட்சி குறித்து 2 மணி நேரம் விவாதித்துள்ளார். அப்போது தி.மு.க. அரசுக்கு எதிரான பல டாகுமெண்ட்டுகளை அமித் ஷாவிடம் காட்டி விவரித்திருக்கிறார் அண்ணாமலை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.