Published on 16/10/2018 | Edited on 16/10/2018

சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் சுகாதார சீர்கேடு உண்டாகும், அவர்களால் 41 நாட்களுக்கு விரதமிருந்து சபரிமலைக்கு வழிப்பட வர இயலாது என்று பந்தள ராஜா பேட்டியளித்துள்ளார். மேலும், மஹரஜோதிக்கு வழக்கம்போல் ஆபரண பெட்டி சபரிமலைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவோம். இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. சட்டத்தை கையில் எடுக்க கேரள அரசு யாரையும் அனுமதிக்கமாட்டோம். சபரிமலைக்கு வரும் பக்தர்களை வழிப்பட வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எங்களின் அரசு செய்து தரும் என்று பினராயி விஜயன் பேட்டியளித்துள்ளார்.