Skip to main content

கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ தொகை அதிகரிக்கும்; ரெப்போ விகிதம் மீண்டும் உயர்வு

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Repo rate hike again: RBI announcement

 

ரெப்போ விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் ரெப்போ உயர்வை அறிவித்தார்.

 

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு நேரலை மூலம் இரு மாதத்திற்கான நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த இரு மாதத்திற்கான ரெப்போ விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி, அடுத்த இரு மாதத்திற்கான ரெப்போ விகிதம் 0.25% உயர்ந்து 6.50% ஆக இருக்கும் எனவும் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பேசிய அவர், பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் எனவும் கூறியுள்ளார். 

 

நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6 ஆவது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த ரெப்போ வட்டி விகித உயர்வை அடுத்து வீடு வாகனங்களுக்கான கடன் வட்டிகளும் உயர வாய்ப்புள்ளது. வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

2023 ஆம் ஆண்டுக்கான முதல் இரு மாத நாணயக் கொள்கைக் கூட்டம் என்பதோடு மட்டுமல்லாமல் மத்திய பட்ஜெட்டுக்குப் பின் நடக்கும் பின் நடக்கும் நாணய கொள்கைக் கூட்டம் என்பதால் இக்கூட்டத்தின் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

Next Story

“97 % ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
97 % Rs 2000 notes withdrawn RBI Information

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மொத்தமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவீதம் ஆகும். அதாவது 97.38 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் மீதமுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.