Skip to main content

100 நாட்களைத் தொட்ட ராகுல் காந்தியின் நடைப் பயணம்; ஒரு பார்வை

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 தெ.சு.கவுதமன்

Rahul Gandhi's 100-day walk!

 

ராகுல் காந்தி எம்.பி.யின் பாரத ஒற்றுமை நடைப்பயணம் நூறாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை தனது பயணத் திட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை நடந்தே கடந்திருக்கிறார் இந்த நேருவின் கொள்ளுப்பேரன். கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீநகர் வரையிலான 3570 கி.மீ தூரத்தில், இதுவரை 2800 கி.மீக்கும் அதிகமான தூரத்தை நிறைவு செய்துள்ளார். வரவுள்ள 50 நாட்களில் இன்னும் 737 கி.மீ. தூரத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது. இந்த 100 நாட்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் என 8 மாநிலங்களில், அவற்றிலுள்ள 42 மாவட்டங்களின் வழியே கடந்துள்ளார். இனி ஹரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், இறுதியாக ஜம்மு காஷ்மீர் சென்று நிறைவடையவுள்ளது.

 

வேலைவாய்ப்பின்மை காரணமாக அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, தவறான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே அரசியல் பிளவு விரிவடைவது, அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்வது, புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தவறுகளைப் பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைப்பயணத்தின் செயல்பாடுகள் வகுக்கப்பட்டன.

 

இந்த நடைப்பயணத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டு ராகுல் காந்தியுடன் நடந்து செல்வதைக் காண முடிந்தது. எளிய பாமர மக்களில் இருந்து பிரபலங்கள், பல்துறை அறிஞர்கள் வரை அவரோடு கரம் கோர்த்து நடந்து சென்றதைக் காண முடிந்தது. முன்பெல்லாம் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் தங்களது பாதுகாப்பு அரண்களை உடைத்துக்கொண்டு பொதுமக்களை நோக்கி வரும்போது அவர்கள் மத்தியில் எழக்கூடிய உற்சாகத்தை ராகுல் காந்தியின் நடைப் பயணத்தில் கலந்து கொண்ட, வரவேற்பளித்த பொதுமக்கள் மத்தியில் காண முடிந்தது.

 

இந்த நடைப்பயணமானது, இந்தியா முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு தங்கள் கட்சியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ததோடு, ராகுல் காந்தியின் அரசியல் மீதும் நம்பிக்கையை உயர்த்துவதாக இருந்தது. இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சித் தலைமையின் மீது விரக்தியோ அல்லது ஏமாற்றமோ உணரத் தொடங்கியிருந்த கட்சித் தொண்டர்கள் பலரும், மீண்டும் தங்கள் கட்சியினை நம்பத் தொடங்கியுள்ளனர். இந்த நடைப் பயணத்தின் மிகப்பெரிய மாற்றமாக இதனைப் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தியை கேலிக்குரிய மனிதராகவும், பரம்பரை பணக்கார வீட்டில் பிறந்த செல்வச் சீமானாகவும் காட்டப்பட்ட அரசியல் நையாண்டியை உடைத்து, தன்னை எளிய மனிதராகக் காட்டிக் கொள்வதில் 100% வெற்றி பெற்றுள்ளார் என்பது இந்த 100 நாட்களில் தெரிய வந்துள்ளது. இதுவும் நடைப் பயணத்தின் சாதனையே! இடைப்பட்ட காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அடி விழுந்திருந்தபோதும், இந்தியா முழுக்க ஓரளவு எழுச்சியை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாதது!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.