Skip to main content

சாலையில் தோன்றிய குளம்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

மழை நீர் அதிகமாக தேங்கி நிற்கும் காரணத்தினால் சாலையில் இருக்கும் பள்ளம் தெரியாமல் பல பேர் விபத்தில் சிக்குவது உண்டு. இந்நிலையில் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், சாலையில் இருக்கும் பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து இரு சக்கர வாகனம் ஒன்று வெளியே எடுக்கப்படுவது பலரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.




வீடியோ தொடங்கும் போது சிறிய பொருள் அந்த குழிக்குள் விழுந்து விட்டது போல, என நினைத்து வீடியோவை பார்க்க தொடங்கினால் இறுதியில் நமக்கு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. நான்கு பேர் சேர்ந்து சாலையின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய குழியில் இருந்து இருசக்கர வாகனத்தை வெளியில் எடுக்கிறார்கள். இதனால் அந்த பைக்கில் சென்ற நபருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாத என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. அந்த வீடியோ வட இந்தியாவில் எடுக்கப்பட்டது என தெரிகிறது.
 

சார்ந்த செய்திகள்