Skip to main content

பப்ஜி விளையாட்டால் நேர்ந்த விபரீதம்... தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்த இளைஞர்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019


மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சவுராப் யாதவ். இவர் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியரில் இருந்து ஆக்ராவிற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது நகை தொழில் செய்துவரும் சந்தோஷ் சர்மா ஒரு வேலைக்காக நகைகளை பாலிஷ் செய்யும் ஆசிட்டை ஒரு பாட்டிலில் வைத்து பையில் எடுத்துவந்துள்ளார்.



இந்நிலையில் ரயில் பயணத்தின்போது செல்ஃபோனில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சவுராப்பிற்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அப்போது  விளையாடும் ஆர்வத்தில் அவர் தண்ணீர் என நினைத்து சந்தோஷ் சர்மா பையில் இருந்த ஆசிட்டை எடுத்துக் குடித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் மயக்கமடைந்து சரிந்து விழ, அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்