Published on 25/11/2019 | Edited on 25/11/2019
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி, இன்று பிரதமர் மோடி தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
![modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/N-Sj9zeVnjd7Is-FJp1U3FqiY7Z1o2c3k4mCEHIazO8/1574657235/sites/default/files/inline-images/11_45.jpg)
மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் ஜார்க்கண்ட்டில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
![modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/7LxN1emnS9p-bVsE2KocGzJbk9USoST_kHOCHhFDMfc/1574657290/sites/default/files/inline-images/1_137.jpg)
இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுடபட்டு வருகின்றன. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், " இன்று காலை 11.35 மணிக்குத் தல்டான்காஞ் பகுதியிலும், மதியம் 1:20 மணிக்கு கும்லா பகுதியிலும் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்" என தெரிவித்துள்ளது.