Skip to main content

சண்டையை நிறுத்த முத்தமிட முயன்ற கணவர்; நாக்கை கடித்துத் துப்பிய மனைவி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

The husband tried to kiss her to stop the fight; The wife who bit her tongue and spit it out

 

ஆந்திராவில் குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை போட்ட மனைவியை சமாதானப்படுத்த கணவர் முத்தமிட முயன்ற நிலையில், மனைவி கணவரின் நாக்கைக் கடித்துத் துப்பிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த். இவருடைய மனைவி புஷ்பாவதி. இந்த தம்பதியர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனைகளுக்காக சண்டையிட்டுக் கொள்வதும் சமாதானம் ஆவதும் வாடிக்கையாகத் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே வழக்கம்போல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சண்டை வாக்குவாதமாக முற்றிய நிலையில், பிரச்சனையை முடிக்க முயன்ற கணவர் தாராசாந்த் மனைவியின் முகத்தைப் பிடித்து அவருக்கு உதட்டில் முத்தமிட முயன்றுள்ளார். ஆனால் ஆத்திரத்திலிருந்த மனைவி புஷ்பாவதி கணவரின் உதடு மற்றும் நாக்குப் பகுதியைப் பலமாகக் கடித்து இழுத்துள்ளார்.

 

இதனால் உதடு மற்றும் நாக்குப் பகுதியில் கடும் காயம் ஏற்பட்டு, சிதைந்து தொங்கிய நாக்குடன் தாராசாந்த் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தாராசந்த்தின் மனைவியை விசாரித்தனர். விசாரணையில், தனக்கு விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றதால், வலுக்கட்டாயமாக நாக்கைக் கடித்து இழுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இப்படி ஒரு வினோத சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; கேபிள் ஆபரேட்டருக்கு போலீஸ் வலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
The old woman who was alone at home was brutalized; Police net for cable operator

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெரித்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கேபிள் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கௌரவ பள்ளம் பூங்கா அருகே வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டர் கோவிந்த் நல்ல முறையில் பழகி வந்துள்ளார். வீட்டில் மூதாட்டி லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த கோவிந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து உதவிகளை செய்வது போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டுக்கு வந்த கேபிள் ஆபரேட்டர் கோவிந்த், சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தபோது பின்புறமாகச் சென்று கையில் இருந்த துண்டால் கழுத்தை நெருக்கியுள்ளார். மூதாட்டி கத்திக் கூச்சலிட முயன்றும் விடாமல் நெருக்கமாகக் கழுத்தை நெருக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்தார். ஆனால் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்த கோவிந்த், அவரிடம் இருந்த பத்து சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்த மூதாட்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கேபிள் ஆபரேட்டர் மூதாட்டியின் கழுத்தை நெரிக்கும் அந்த பரபரப்பு காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அதை ஆதாரமாக வைத்து கேபிள் ஆபரேட்டர் கோவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.