Skip to main content

காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்..? விபரீத கேள்வியால் மாணவர்கள் அதிர்ச்சி!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் எப்படி தற்கொலை செய்துகொண்டார் என குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளியின் தேர்வுத் தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தியின் மரணம் குறித்த வரலாறு நாடு முழுவதும் அறியப்பட்டுள்ள நிலையில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
 

hj



குஜராத் மாநிலத்தில் உள்ள உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்ற தேர்வில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை படித்து பார்த்ததும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்