
இலங்கையில் வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் இருந்ததாக வெளியான செய்திகளால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இலங்கையிலுள்ள கொழும்புவில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் சோள பயிர் காட்டில் பாதுகாப்பிற்கு சென்ற கருணாதிலக் என்பவர் இருட்டில் இரண்டடி உயரமும் நீண்ட தலைமுடியுடன் சிவப்பு முகம் கொண்ட ஒரு வினோத உருவத்தை கண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதுபற்றி அக்கம்பக்கத்தினருக்கு கூற ஓடிவந்த மக்கள் அங்கு ஒன்றும் இல்லை என கலைந்து சென்றனர்.
அதன்பின்னர் சிலநாட்கள் கழித்து அனுராதபுரம், போலநெருவாவுக்கு அருகில் வெளிச்சமான பொருள் ஒன்று தரை இறங்கியதாக பலர் தெரிவித்துள்ளனர்.அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அங்கு ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சமபவங்களாலும் வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் உள்ளது என்ற செய்திகள் பரவியதால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.