Skip to main content

பாஜக மூத்த தலைவரின் மகன் லண்டனில் மாயம்...

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

தெலங்கானா மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதய் பிரதீப்பின் மகன் இங்கிலாந்தில் மாயமாகியுள்ளார்.

 

bjp leader son went missing in london

 

 

தெலங்கானா மாநிலம் கம்மன் மாவட்ட பாஜகவின் தலைவர் உதய் பிரதீப். இவரது மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா (23) இங்கிலாந்தில், எம்.எஸ். படித்து வந்தார். தினசரி பெற்றோருடன் தொலைபேசியில் பேசும் உஜ்வால், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் யாரையுமே தொடர்பு கொள்ளவில்லை.

இதனையடுத்து தனது மகனை காணவில்லை என உதய் பிரதீப், லண்டன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது உஜ்வாலின் பை மட்டும் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உஜ்வால் காணாமல் போன விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை இணை அமைச்சரான கிஷான் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்