Skip to main content

தனக்கு ஃபோட்டோகிராஃபி, குழந்தைகளுக்கு கப் கேக்... இனி இதெல்லாம் முடியுமா? பிரியங்கா காந்தி பைட்ஸ்

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
priyanka gandhi


"என்னுடைய வழக்கமான நாளில், காலை எழுந்து, என் குழந்தைகளையும் எழுப்பி அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். பள்ளியை விட்டு என் குழந்தைகள் திரும்பி வரும்போது, எப்போதாவது அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை சாப்பிட தருவேன். அவர்களுக்குப் பிடித்தது கப் கேக்தான், அடிக்கடி அதை செய்வேன். அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் ஹோம்வொர்க் செய்ய உதவுவேன். இதுதான் என்னுடைய வழக்கமான நாள்" - கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு தனியார் பத்திரிகை பேட்டியில் பிரியங்கா காந்தி பகிர்ந்தது. ஆனால், இனி இத்தகைய வழக்கமானதொரு நாள் அவருக்கு சாத்தியமில்லை என்றுதான் சொல்லவேண்டும். நேற்று உத்திரப்பிரதேசத்தில் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கோட்டை என்று சொல்லப்படும் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் ‘இந்திரா பேக்’ (Indira Back), ‘எங்களின் துர்கா தேவி நீங்கள்... நீங்கள் துர்கா தேவியின் அவதாரம்’ என்று வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆம், பிரியங்கா காந்தி இனி கிழக்கு உ.பி. பொதுச் செயலாளர். 
 

கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடம் ஏதும் கொடுக்கப்படவில்லை. தொடக்கத்தில் காங்கிரஸ் சார்பாக பேசியபோது, வேண்டுமானால் காங்கிரஸுக்கு இரண்டு சீட்டுகள் தருகிறோம் என்று பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து உ.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். அப்போது காங்கிரஸின் முடிவை பலர் கேலி செய்தார்கள். இந்த முடிவு பாஜகவுக்குத்தான் சாதகமாகும் என்றார்கள். ஆனால், அங்குதான் ட்விஸ்ட் ஒன்றை காங்கிரஸ் மேலிடம் வைத்தது. இதுவரை தன்னுடைய அம்மாவுக்கு, அண்ணனுக்கு உட்பட வெகுசில பிரச்சாரங்கள் மட்டும் செய்து வந்த பிரியங்கா காந்திக்கு கிழக்கு உ.பி.  பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து, அவரை முழுதாக அரசியலுக்குள் நுழையச் செய்துள்ளது.
 

priyanka gandhi


யாரும் எதிர்பார்க்காத இந்த ட்விஸ்ட், பலரால் வரவேற்கப்பட்டது. ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டாகினார் பிரியங்கா காந்தி. சோனியா காந்தி முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டபோதே, அவருக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கியவர் பிரியங்கா காந்தி. அந்தத் தருணத்திலிருந்து தற்போதுவரை மக்களிடம் அவருக்கு மிகப்பெரிய மாஸ் இருக்கிறது. காரணம் மக்களோடு மக்களாக ஒன்றி இவர் இருப்பார் என்பதுதான். இன்னுமொரு காரணம், அப்படியே இந்திரா காந்தியை உறித்து வைத்த சாயல், அதுவும் பலரை ஈர்த்திருக்கிறது. பாஜக இதை, 'ஒரு குடும்பமே ஒரு கட்சிக்குள் பதவி வகிக்கிறது, குடும்ப அரசியல் செய்கிறார்கள். ஆனால், பாஜகவில் தொண்டர்கள்தான் கட்சியை நடத்துகிறார்கள்' என்றது.
 

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில், காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருந்தாலும், ஏற்கனவே தக்க வைத்திருந்த மாநிலத்தில் ஆட்சியை விட்டது பலருக்கு யோசனையை கொடுத்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் அலை வீசுமா, வீசாதா என்பது உறுதியாக சொல்ல முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், பிரியங்காவுக்கு இந்தப் பதவியை கொடுத்தபின் காங்கிரஸ் மிகப்பெரிய அடி எடுத்து வைத்திருக்கிறது. இதனால் சோர்வாக இருக்கின்ற காங்கிரஸ் தொண்டர்கள் குஷியாக கட்சி வேலைகளை எடுத்து செய்வார்கள், இது ஒரு மாற்றத்தை கொடுக்கவல்லது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, வட இந்தியாவிலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பிரியங்காவுக்கு பதவி கொடுத்து அரசியலுக்கு அழைத்து வாருங்கள் என்ற கோரிக்கை இருந்தது. அது தற்போது காங்கிரஸ் மேலிடத்திற்கு கேட்டிருக்கிறது போல.
 

priyanka gandhi


காங்கிரஸ்காரர்கள் இவ்வளவு கொண்டாடும் பிரியங்கா காந்தி, ராஜிவ் - சோனியா மகள் என்பதைத் தாண்டி யார் என்று பார்ப்போம்...
 

பிரியங்கா காந்தி, 12ஆம் தேதி ஜனவரி 1972ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு மகளாய் பிறந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி இவருடைய அண்ணன் ஆவார். நேரு குடும்ப  வாரிசுகளான இவர்கள் அனைவரும் இந்திய அரசியலில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறார்கள். அதில் மறைமுகமாக பங்காற்றி வந்த பிரியங்கா தற்போது வெளிப்படையாக அரசியலில் குதித்துள்ளார். டெல்லியிலுள்ள மாடர்ன் ஸ்கூல் அண்ட் கான்வென்ட் ஆஃப் ஜீஸஸ் அண்ட் மேரி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து ஜீஸஸ் அண்ட் மேரி கல்லூரியில் உளவியலில் இளநிலை படிப்பை முடித்தார். அதன் பின்பு 2010ஆம் ஆண்டில் புத்திசம் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் புத்திஸ தத்துவத்தை ஆழ்ந்து பயின்றிருக்கிறார். விபஸன்னா தியான பயிற்சியும் பெற்றிருக்கிறார். தன்னுடைய 12 வயதிலிருந்து இவர் ஃபோட்டோகிராஃப்கள் எடுத்து வருகிறார், ராஜிவ் காந்திக்கும் ஃபோட்டோகிராஃபி மிகவும் பிடித்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1997ஆம் ஆண்டு ராபர்ட் வதேரா என்னும் பிசினஸ் மேனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. தன்னுடைய அம்மா சோனியா காந்தி 1999ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று,  அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்காக முதன் முதலில் பிரச்சாரம் மேற்கொள்ளத் தொடங்கினார் பிரியங்கா காந்தி.  பிரச்சாரம் என்றால் சாதாரணமாக மேடையில் பேசிவிட்டு செல்வதல்ல, அந்தத் தொகுதியிலு்ள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று அந்த மக்களிடம் உரையாடி பிரச்சாரம் செய்தார். இதுபோல் 2004ஆம் ஆண்டில் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட்டபோதும், அம்மாவுக்கும் அண்ணனுக்கும் உதவியாக பிரச்சாரம் மேற்கொண்டார். 2007ஆம் ஆண்டு ராகுல் உ.பி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய, பிரியங்கா அமேதி, ரேபரேலி உட்பட பத்து தொகுதிகள் முழுவதும் இரண்டு வாரங்கள் தங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது கட்சியிலேயே ஒரு முக்கியமான பதவி இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...

 

 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Deva Gowda crictizes Rahul gandhi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.