Skip to main content

ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்... வானத்தையும் வசப்படுத்தலாம் - பைலட் வர்ஷா!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

sd


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம், 'சூரரைப் போற்று'. படம் வெளிவருவதற்குப் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், ஓ.டி.டியில் படம் வெளியிடப்பட்டது. ஒரு சாமானியனின் விமானக் கனவு என்னவாயிற்று என்பதை நமக்கு மிக நேர்த்தியாகக் கூறியிருப்பார் படத்தின் இயக்குநர். படத்தில் மாறனாக வரும் சூர்யா கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில், ஒரு பெண் விமானத்தை ஓட்டி வருவது போன்று காட்சி அமைந்திருக்கும். அந்தப் பெண் பெயர் வர்ஷா. அவர் நிஜ விமானியும் கூட. படத்தில் நடித்த அனுபவம், விமானியாக தான் பட்ட கஷ்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நம்முடன் பகிந்துகொண்டார். அவரின் சுவாரசிய உரையாடல்கள் இதோ,

 

'சூரரைப் போற்று' படத்தின் கதையே ஒரு மிடில் கிளாஸ் பையன் மிகப்பெரிய இலக்கை நோக்கி ஓடுவதுதான். அதைச் சுற்றியே இந்தக் கதை அமைப்பும் அமைந்திருக்கும். நீங்கள் நிஜ பைலட், இதற்காகப் பல்வேறு கஷ்டங்களை நிச்சயம் கடந்திருக்க வேண்டும். இந்த இந்தியச் சூழலில் ஒரு பெண் இந்த இடத்தை எளிதில் அடைய முடியும் என்று நினைக்கிறீர்களா? 

 

நிச்சயமாக அது எளிதான காரியம் அல்ல. அதற்காகக் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். நிறையப் போராட்டங்களைக் கடந்த பிறகுதான், இதை அடைய முடிந்தது. இது எனக்கு மட்டும் அல்ல, சாதித்த அனைவருக்கும் முழுவதுமாக பொருந்தக்கூடியது. எனவே போராட்டம் என்பது சாதிப்பதற்கு உறுதுணையாகவே இருக்கும். 

 

சாதாரணமாக சாலையில் பெண் ஒருவர் பைக் ஓட்டிச் சென்றாலே பலர் ஆச்சிரியமாகப் பார்ப்பார்கள், சிலர் திட்டுவார்கள், பலர் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் பைலட் என்பது மிக முக்கியப் பொறுப்பு. அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டிய கடமை உள்ள பொறுப்பும் கூட. அப்படி இருக்கையில் அதில் ஏதேனும் சிரமம் இருப்பதாக நினைக்கின்றீர்களா? 

 

முடிவு எடுக்கும் திறன் என்பது அந்தத் துறையில் மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் விமானம் இயக்குதலில் இது போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளை நாம் அடிக்கடி சந்திக்க நேரும். எனவே யோசிக்க சிறிதும் நேரமின்றி இருக்கும் நிலையில், சரியான முடிவை நாம் மிகச் சிறிய கால அளவில் எடுத்தாக வேண்டும். எனவே ஆளுமை என்பது இந்தத் துறையில் மிக முக்கியமான ஒன்று. அது வேலை செய்கின்ற இடத்தில் மட்டும்தான். எல்லா இடங்களிலும் இல்லை. 

 

cnc

 

இந்தத் துறையிலும் ஆண் பெண் என்ற பாகுபாடு மற்ற துறைகளைப் போன்று இருக்கிறதா? 

 

அப்படி இல்லை, ஆனால் என்னிடம் பலர், பெண்ணாக இருப்பதால், ஈஸியா ட்ரெயினிங் கிடைத்திருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். எங்கள் துறையில், ட்ரெயின்ங் என்பதை குறைத்துக் கொள்ளவே முடியாது. நாங்கள் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். எனவே, இந்தத் துறையில் இருக்கின்ற அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். ஆணுக்குக் கொடுக்கின்ற அதே பயிற்சியைத்தான் நாங்களும் பெற வேண்டும். அதைத்தான் பயிற்சியாளர் எங்களுக்கும் கற்றுத்தருவார். 200 மணி நேரம் பயிற்சி என்றால், அதனை நாங்கள் முழுவதும் கற்றிருக்க வேண்டும். அதற்கான பெட்ரோல் செலவு இருக்கிறது. எனவே இது காஸ்ட்லியான பயிற்சியாகத்தான் இருக்கும். ஆர்வம் மட்டும் இருந்தால், எந்தத் துறையிலும் பெண்கள் சாதிக்கலாம்.

 

 

 

Next Story

தோழியை விமானி அறையில் அனுமதித்த விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு அபராதம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

dgca fine thirty lakhs for air india limited dubai to delhi flight

 

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானியாக இருந்த ஒருவர் தனது பெண் தோழியை விமான பைலட்டின் கட்டுப்பாட்டு அறையான காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது குறித்த புகார் ஒன்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) அளிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் இதில் சம்பந்தப்பட்ட பெண் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர் ஆவார். இருப்பினும் இந்த சம்பவம் நடந்த அன்று அந்த பெண் விமானத்தில் பயணியாக சென்றது தெரியவந்தது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்த விமானியின் இந்த செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. விமானி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன் அவரது விமான ஓட்டுநர் உரிமமும் 3 மூன்று மாதக் காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது விமானியின் இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

 

Next Story

ஹெலிகாப்டர் விபத்து: தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

The person who passed away in the helicopter crash was from Theni; Evening fitness

 

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு அசாமின் மிஸாமாரி பகுதிக்கு செல்ல இருந்தது. மாண்டாலா மலைப்பகுதியில் பறந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை இழந்தது. காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 9.15க்கு தனது தொடர்பை இழந்ததால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கடைசியாக தகவல் கிடைத்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

 

பகல் 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டது. வானிலை பனிமூட்டமாகக் காணப்பட்டதால் மீட்புப் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த இரு ராணுவ அதிகாரிகளின் உடல்களும் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அடையாளம் காணப்பட்ட ராணுவ அதிகாரிகள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் என்பதும் தெரியவந்தது.

 

இந்நிலையில் உயிரிழந்த 37 வயதான ஜெயந்த் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இன்று மாலை 5 மணியளவில் ஜெயந்த்தின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.