Skip to main content

பணம் கட்ட முடிஞ்சா கட்டிடுங்க... கரோனா வந்தா எங்களுக்கென்ன... தனியார் பள்ளியின் அராஜகம்!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி, பொருளாதார சிக்கலில் தவிகிறார்கள். இந்த இக்கட்டான நேரத்திலும், மாணவர்களை அடைத்து வைத்து கட்டாய வகுப்பு நடத்தியதையும்,அடுத்த வருடத்திற்கான கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவதையும் பார்த்து, இது கொரோனாவை விட மோசமான வைரசாக இருக்குதே என்று பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

 

school



திருச்சியில் உள்ள கமலா நிக்கேதன் மான்டிசரி பள்ளி நிர்வாகம் அடுத்த வருடத்திற்கான கட்டணத்தைக் கட்டச் சொல்லி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. மார்ச் 23 முதல் 30 ஆம் தேதி வரை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியே நாட்களைக் குறித்து அதற்குள் முதல் திருப்புத் தொகையை கட்டிவிட வேண்டும் என்றும், அதைக் கட்டத் தவறியவர்கள் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கட்டுபவர்கள் 250 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்ட வேண்டும் என்றும், ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கட்டுபவர்கள் 500 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்ட வேண்டும் என்றும் இதன் பிறகு கட்டாதவர்கள் அனைவரும் பள்ளியின் ரீ-அட்மிஷனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கடுமையாக ஒரு நோட்டிஸ் ஒட்டியும், அதையே இமெயிலிலும் அனுப்பி இருக்கிறார்கள்.

 

school



கரானோ பிரச்சனையில் ஊரடங்கு உத்தரவில் எல்லோரும் வீட்டுக்குள் இருக்கும் நேரத்தில், பணத்தை ஆன்லைனில் கட்டுங்கள் என்று மீண்டும் எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் அறிவிக்கை கொடுக்கவும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
 

இந்த நேரத்தில் எப்படிக் கட்டணம் செலுத்துவது? என்ற கவலையில் இருக்கின்றனர். ஊரடங்கின் போது இப்படி பணம் கட்டச்சொல்வது மனிதாபிமான செயலே இல்லை என்று பெற்றோர்கள் குமுறுகின்றனர்.கஷ்டப்பட்டு வாங்கிய சீட் என்பதால் பள்ளி நிர்வாகத்தைக் கேட்பதற்கும் தயங்குகின்றனர்.திருச்சியில் உள்ள சிபிஎஸ்சி, மான்டிசரி பள்ளிகளிலே அதிகபட்சக் கல்விக் கட்டணம் வாங்குவது இந்தப் பள்ளியில் தான். இந்தப் பள்ளி நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 4,500 மாணவர்கள் படிக்கிறார்கள்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலே இருக்கிறது இந்தப்பள்ளி. அரசாங்கத்தின் எந்தக் கல்விக் கட்டண நிர்ணயத்தையும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்வதே கிடையாது.அரசாங்கம் விதித்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.

நோட்டீஸ் குறித்து நாம் மாணவனின் பெற்றோர் போல் பள்ளி நிர்வாகத்திடம் பேசிய போது, "சார்.. இப்போ ஆன்லைனில் பணம் கட்ட முடிஞ்சா கட்டிடுங்க... இல்லைன்னா தேதி நீட்டிப்பு பண்ணுவாங்க, அப்ப கட்டுங்க'' என்று கிடைத்தவரைக்கும் லாபம் என்கிற கணக்கிலேயே பேசினார்கள்.

 

centre



இதே போல ஊரடங்கு காலத்தில் திருச்சியிலேயே இன்னொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது.

21 நாட்கள் ஊரடங்கினால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழுமையாகவும், சில மாநிலங்களில் பாதி நடந்த நிலையிலும் ஒத்தி வைக்கப் பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியும் நடக்க வாய்ப்பில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவது இயலாத காரியம் என்பதாலும், பிளஸ்டூ தேர்வு நடத்தி அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின்னரே அது நடத்த முடியும் என்பதாலும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே - 3 ஆம் தேதி நடை பெற இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் சேதுராமன்பிள்ளை காலனியில் இயங்கி வரும் பாயிண்ட் அகாடமியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளது. இதில் 10 மாணவர்கள், மாணவிகள் அங்கேயே தங்கிப் படிக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு மாணவர்கள் ஊருக்குக் கிளம்பிய நேரத்தில், எல்லோரும் இங்கேயே தங்கியிருங்கள், உங்கள் பெற்றோர் முழுமையான கட்டணத்தைக் கொடுத்து விட்டு அதன் பிறகு செல்லுங்கள் என்று சொல்லி அங்கே தங்க வைத்து வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார்.ஊரடங்கு நெருக்கடிக்கு நடுவே தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் வகுப்புகள் நடந்த நிலையில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் வேறு வழியில்லாமல் தங்க ஆரம்பித்தனர்.
 

மாணவர்களை அடைத்து வைத்து வகுப்புகள் நடத்துவது குறித்து ரகசியத் தகவல் வரவும் நாம் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்தோம். உடனே அங்குச் சென்ற காவல்துறை, மாணவர்களை மீட்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு, அந்த நீட் வகுப்பு நடத்திய நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.