Skip to main content

தமிழக உரிமைகளை பறிக்கும் மோடி அரசு!

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
banvari s
                   அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக
                            புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பா

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தமிழர்களை என்ன நினைத்திருக்கிறது என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அலைக்கழித்தது முதல் முக்கியமான பிரச்சனைகள் அனைத்திலும் தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக செயல்படுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

ஒருவகையில் தமிழக இளைஞர்களிடம் பாஜக தனது முகமூடியை இழக்கிறது என்றாலும், ஆட்சி நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ்சின் மதவாத நோக்கம் கொண்ட ஆட்களை திணிப்பதிலும், ஆர்எஸ்எஸ்சின் மறைமுக செயல்திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றுவதிலும் குறியாக இருக்கிறது.

குறிப்பாக நீதித்துறையை தனது விருப்பப்படி ஆட்டுவிப்பதில் அது வெற்றிபெற்றிருக்கிறது. வருங்காலத் தலைமுறையினரின் மூளையைச் சலவைசெய்யும் கல்வித்துறையில் மெல்லக் கொல்லும் காவி விஷத்தை புகுத்துவதில் அது வெற்றிபெற்றிருக்கிறது.

பாண்டிச்சேரியில் தனக்கு ஒத்துழைக்காத காங்கிரஸ் அரசின் விருப்பத்துக்கு மாறாக நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் விரைவாக தீர்ப்பு வருகிறது. அதேசமயம், தனது பினாமி அரசாங்கத்து ஆபத்தான 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கிலும், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக்கோரும் வழக்கிலும் விசாரணை முடிந்தும் தீர்ப்பை வெளியிடாமல் தாமதப்படுத்துகிறது.

ஜெயலலிதா இறந்ததும் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து, தமிழக அரசை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது மோடி அரசு. ஜெயலலிதா இருக்கும்போதே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை தள்ளிப்போடப்பட்டது. அதற்கு காரணம் இப்போதுதான் தெளிவாகியிருக்கிறது. பாஜக தனக்கு வேண்டப்பட்ட ஒரு ஆர்எஸ்எஸ் ஆளை அந்தப் பொறுப்பில் நியமித்திருக்கிறது. அதிலும் காவிரி விவகாரம் தீப்பற்றி எரிகிற நேரத்தில், கர்நாடகாவிலிருந்து ஒரு காவியை பிடித்துவந்து கவுரவமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருக்கிறது மோடி அரசு.
 

isai kalluri
                                            பிரமிளா குருமூர்த்தி

ஏற்கெனவே, தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா குருமூர்த்தியை நியமித்தார் ஆளுநர். அதன்பிறகு, அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு, மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள சாவித்திரிபாய் பூலே சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தரான தம்ம சூரியநாராயண சாஸ்திரியை நியமித்தார்.

தகுதிவாய்ந்த தமிழர்கள் இல்லாததுபோல இப்படி வேற்று மாநில ஆட்களை தமிழகத்தின் சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களுக்கு நியமிப்பதை மோடி அரசு ஊக்குவிப்பதை தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டிக்கின்றன. ஆனால், ஆளும் அதிமுக அரசு, இந்த நியமனங்கள் தொடர்பாக மாநில உரிமை பறிபோவதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் எருமை மீது மழைவிழுந்த கதையாக மழுப்பித் திரிகிறது.
 

sastri
                      தம்ம சூரியநாராயண சாஸ்திரி


அதேசமயம், மாநில பாஜக தலைவர் இந்த நியமனங்களை நியாயப்படுத்தி இருக்கிறார். இஸ்ரோவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த சிவனை தலைவராக நியமிக்கவில்லையா என்று புத்திசாலித்தனமாக கேட்டிருக்கிறார். இது எவ்வளவுபெரிய அறிவிலித்தனமான சமாளிப்பு என்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

இஸ்ரோ என்பது ஏதேனும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா? அது ஒரு மத்திய அமைப்பு. அறிவியல் அமைப்பு. அங்கு அறிவும் சீனியாரிட்டியும்தான் பொறுப்புக்கு வர தகுதி...

அந்த அமைப்புக்கு சிவனை தலைவராக்கியதையும்... அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கன்னடர் ஒருவரை நியமி்தததையும்... இணைத்துப் பேசும் தமிழிசையின் மேதைமையை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை.

தமிழக பாஜக தலைவர்கள் தமிழகத்துக்கு எதிரான எல்லாவற்றையும் ஆதரித்து பேசுவது ஒருபக்கம் நல்லதுதான் என்றாலும், இதற்கு விரைவில் முடிவுகட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.