Skip to main content

அமித் ஷாவா... சந்தான பாரதியா... - மீண்டும் ட்ரெண்டான மீம் கிரியேட்டர்களின் சேட்டை!  

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இராணுவ கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பிரதமர் மோடிக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை அடுத்து அவரது கருப்புக் கொடி காட்டி கண்டனத்தை தெரிவித்தனர். இதிலிருந்து தப்பிப்பதற்காக மோடியின் பயணத்திட்டம் சென்னைக்குள்ளேயே தரைவழியில் அல்லாமல் வான் மார்க்கமாக அமைக்கப்பட்டது. அப்படியும் விடாமல் பிரம்மாண்ட கருப்பு பலூனை மேலே அனுப்பியது திமுக. அன்று ட்விட்டரில் #gobackmodi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக இருந்தது. அது கடைசியில் உலகலெவலில் பேமஸானது. இது பலதரப்பில் விவாதத்தை ஏற்படுத்தவும் செய்தது. 

தற்போது பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷா, தமிழக பாஜகவின் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வுக்காக சென்னைக்கு வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்கு ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தது போல, தற்போது அமித் ஷாவின் வருகைக்கும் இந்திய அளவில் #gobackamitsha என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

 

 


பாஜக தலைவர் அமித் ஷாவின் தோற்றத்தின் அடிப்படையில் 'அம்மன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் நாகிரெட்டியுடனும் 'குணா', 'மகாநதி' ஆகிய படங்களை இயக்கிய நடிகர் சந்தான பாரதியுடனும் ஒப்பிட்டு மீம்ஸ்களை பரப்பினர். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருக்கும் அமித் ஷாவை தமிழக மீம் கிரியேட்டர்கள் வளைத்து வளைத்து மீம்ஸ் போட்டு நகைக்கின்றனர்.

தமிழ் படம் 2.0 வில் சிவாவின் நண்பர்களாக வரும் இளைஞர் பட்டாளத்தில் ஒருவராக நடித்திருக்கிறார் சந்தான பாரதி. வழக்கமான தோற்றத்திலிருந்து மாற்றமாக நிறைய முடியுடன் மாடர்ன் உடையுடன் சந்தான பாரதியின் தோற்றம் பார்க்கவே செம கலாயாக இருக்கிறது. முகம் எல்லாம் தாடி, தலையில் நீண்ட முடி என்று டீக்கடையில் சிவாவுக்கு அட்வைஸ் செய்வார். இந்த ஒரு டெம்பிளேட்டையும் இந்த #gobackamitshaவில் இணைத்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றனர். சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகியிருக்கும் சில மீம்ஸ்கள் இங்கே...

                        

amit shah

 

 

 

amit shah memes

 

amit memes

 

amit mishramodi amit

 

 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.