Skip to main content

அதுக்கு இப்ப என்ன? சி.பி.ஐ.-க்கு போனா இன்னும் எத்தனை பேரு சிக்குவாங்கனு பாருங்க... காசி வழக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

bjp


காசியின் பாலியல் கொடூரத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராடிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான டீம் விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளளது. காசி மீது பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் போக்சோ மற்றும் கந்துவட்டி வழக்கைத் தவிர 4 இளம் பெண்கள் கொடுத்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட அந்த 4 வழக்குகளின் ஆவணங்களை மட்டும் குமரி மாவட்ட காவல்துறை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைத்து இருக்கிறது.
 


இதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் காசியை வெளியில் எடுக்கத் திட்டமிட்டியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். சிறையில் திருட்டுக் குற்றவாளிகள் 5 பேருடன் அடைக்கப்பட்டியிருக்கும் காசி எதுவும் அலட்டிக்கொள்ளாமல் கேசுவலாக நாட்களைக் கடத்துகிறான். சிறையில் அவனை தந்தை தங்கபாண்டியன் மற்றும் இரண்டு உறவினர்கள் சந்தித்துள்ளனர். கரோனா பிரச்சினையால் சிறையில் இரண்டு மீட்டர் இடைவெளியில் நின்று காசியைப் பார்த்து கலங்கியிருக்கிறார்கள் தந்தையும் உறவினர்களும்.

வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு போய் விட்டது என்று அவர்கள் சொன்னதும், "அதுக்கு இப்ப என்ன? சி.பி.ஐக்கு போனாலும் பரவாயில்லை. என்னை போலீஸ் பிடிச்சதில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டது வரை அதற்கு முன் என்னோடு இருந்தவர்கள் (கூட்டாளிகள்) ஆறுதலுக்குக் கூட உங்களையும் பார்க்கல. எனக்காக எந்த உதவியும் செய்யல. இந்த விசயத்தில் எனக்குப் பின்னால யார் யார் உண்டுனு எனக்கு மட்டும்தான் தெரியும். என்னை அழிக்க நினைச்சா அவங்கள கண்டிப்பாகக் காட்டி கொடுப்பேன்'' என ஆவேசத்தைக் காட்டியிருக்கிறான் காசி.
 

dr

 


அவனுடைய ஆவேசத்திலும் அர்த்தம் இருக்கிறது எனக் கூறும் உறவினர்கள், சென்னை பெண் டாக்டர் கொடுத்த அந்த ஒரு புகாரோடு போலீசை சரிக்கட்டி அவனை ஜாமீனில் எடுத்து வழக்கை முடித்துவிடலாம் என்று சிலர் பேரம் பேசினார்கள். அந்தப் பேரத்துக்கும் ஒத்துக்கொண்டோம். கடைசியில் அவர்களும் கைவிட்டு விட்டார்கள். அதன் பிறகு அவனை ஆட்டுவித்த நண்பர்கள்கூட காசியை பலிகடா ஆக்கி விட்டு அவர்கள் தப்பிக்க முயற்சிப்பதோடு காசியை பற்றி சில தகவல்களையும் வெளியே விட்டு இருக்கிறார்கள் என்றனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணையைத் தொடங்கியிருக்கும் நிலையில் போலீஸ் சோர்ஸ் ஒருவர் முக்கியத் தகவலை நம்மிடம் கூறினார். "செக்ஸ் டாக்டர் பிரகாஷைப் போல் காசியையும் ஜாமீனில் வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளே வழக்கை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் சி.பி.சி.ஐ.டியினர் இருப்பதாகவும், இதற்கு முக்கியக் காரணமே வெளியில் இருக்கும் சிலரை காப்பாற்றுவதற்குத் தான்'' என்ற அவர் மேலும், "காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு வருவதற்கு முக்கியக் காரணம் முதல்வர். அவரின் நேரடி கவனத்துக்கு இந்தச் சம்பவம் சென்றதால்தான். அதேபோல் காவல் துறை தலைமையும் காசி வழக்கை பொள்ளாச்சி ரேஞ்சுக்கு கொண்டு போய்விடாமல் இருக்க அதற்காக இருக்கிற சாட்சியங்கள் தடயங்களை வச்சி சி.பி.சி.ஐ.டியே வழக்கை முடித்து விட வேண்டுமென்று நினைக்கிறதாம். இதனால் மேற்கொண்டு யாரையும் குறிப்பாக காசியின் கூட்டாளிகள் என்று கருதப்படும் அந்த வி.ஐ.பி. நபர்களை விசாரிப்பதாகத் தெரியவில்லை. இதனால் காசியோடு மட்டும் வழக்கை முடித்து விடுவார்கள்'' என்றார்.
 

http://onelink.to/nknapp


இதற்கிடையில் காசியுடன் தொடர்புடைய பட்டியலில் மறைந்து இருக்கும் தாசில்தார் ஒருவர், காசியின் அந்தரங்க வேட்டைக்கு கோவை, சென்னை, பெங்களூரு என்று காசியுடன் அடிக்கடி பறந்து இருக்கிறாராம். முக்கிய அதிகாரி ஒருவரின் நெருக்கமாக தாசில்தார் இருப்பதால் ஏற்கனவே காசியின் வழக்கை விசாரித்த லோக்கல் போலீசாரின் பார்வை அவர் பக்கம் திரும்பவில்லை. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பார்வையாவது அவர் பக்கம் விழுமா? அதுபோல் காசியின் வி.ஐ.பி. கூட்டாளிகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வளையத்துக்குள் வருவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையால் காசியின் வழக்கில் உண்மை தெரிந்து விடாது. அதன்மீது நம்பிக்கையும் இல்லை. சி.பி.ஐதான் இதற்கு ஒரே தீர்வு என்கின்றனர் குமரி மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம்.

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.