Skip to main content

கனிமொழி விசிட்...! ஆளுங்கட்சி ஷாக்...!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020
kanimozhi

 

வாழ்வா-சாவா என்கிற அரசியல் களத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்க முழு வீச்சில் தயாராகி விட்டது தி.மு.க. என்பதையே "விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பரப்புரை பயணம் வெளிப்படுத்துகிறது. கட்சியின் மாநில நிர்வாகிகள்-அணிகளின் பொறுப்பாளர்கள் இதனை மேற்கொள்கின்றனர்.


முதல் பரப்புரையை இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் திருக்குவளையில் தொடங்கினார். நடிகர் என்பதால் இளைஞர்கள் கூட்டம் திரண்டது. திருவாரூர், தஞ்சை மாவட்ட பகுதிகளில் அவரது பயணம் கவனத்தைக் கவர்ந்த நிலையில், மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, தி.மு.கவுக்கு பலவீனமான ஏரியா எனச் சொல்லப்படும் கொங்கு மண்டலத்தில் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியது ஆச்சரியம் கலந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. எதற்கு இந்த ரிஸ்க் என்று சொந்தக் கட்சிக்காரர்களே யோசித்த நிலையில், அதற்கு நேர்மாறாகத் தன் பயணத்தின் தாக்கத்தை வெளிப் படச் செய்தார் கனிமொழி. முதல்வர் பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப் பாடியில் 29 ந் தேதி பயணத்தை தொடங்கி சிக்ஸர் அடித்தார். சேலம் மாவட் டத்தை அடுத்து, 2ந் தேதிவரை ஈரோடு மாவட்டம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார்.

 

kanimozhi

 

அந்தியூரில் நடந்த வார சந்தைக்கு சென்ற கனிமொழி, பெண் வியாபாரிகளிடம் பேசியதோடு, அவர்களிடம் வெற்றிலை வாங்கி, உரையாடியபடி உற்சாகப்படுத்தினார். அதே போல் பர்கூர் மலை கிராமம் சென்று மலைவாழ் மக்களிடம் பேசியதோடு அவர்களோடு மதிய உணவு சாப்பிட்டார். அடுத்து பவானி சென்று ஜமக்காள பெட் சீட் உற்பத்தி செய்யும் நெசவாளர்களை சந்தித்தார். தொடர்ந்து சலங்க பாளையம், கவுந்தப்பாடி, பெருந்துறை, வெள்ளோடு, மொடக்குறிச்சி, ஈரோடு என பயணம் செய்த கனிமொழி ""விவசாயம், நெசவு, வியாபாரம் செய்யும் மக்கள் மட்டுமல்ல, கூலி வேலை செய்யும் மக்களுக்கும் இந்த ஆட்சியால் நிம்மதி இல்லை. எல்லோருக்கும் துன்பம் தரும் ஆட்சியாக இது உள்ளது.

 

தன்னை ஒரு விவசாயி என கூறிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் எப்படிப்பட்ட பாதிப்புகளோடு வாழ்கிறார்கள், அவர்களின் குறைகள் என்ன என்பதை புரிந்து கொள்ளவில்லை. கொங்கு மண்டலம் விவசாயத்தோடு ஜவுளி, மஞ்சள் என தொழில் சார்ந்த வளமான பகுதி. அதை சிதைத்து விட்டது இந்த ஆட்சி'' என பல புள்ளி விபரங்களோடு மக்களிடம் கனிமொழி பேசி அவர்களை கவர்ந்தார்.

 

kanimozhi

 

டிசம்பர் 1 ந் தேதி தந்தை பெரியார் பிறந்து வாழ்ந்த இல்ல மான பெரியார், அண்ணா நினைவகத்திற்கு வந்தவர் அந்த இல்லத் தில் இருந்த பெரியார், அண்ணாவின் அரிய புகைப்படங்கள், பெரியார் பிறந்த அறை, அண்ணா அங்கு பணியாற்றிய அறை என எல்லாவற் றையும் சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டார். பிறகு வெளியே வந்து நக்கீரனிடம் பேசிய அவர் ""நான் பல முறை ஈரோடு வந்திருந் தாலும் பெரியார், அண்ணா நினைவகத்திற்கு இன்றுதான் வந்தேன். சுயமரியாதை இயக்கத்தின் பிறப்பிடம் இது. தலைவர் கலைஞர் குரிப்பிடுவது போல இது குருகுலம். இங்கு வந்தது எனக்கு பெருமை என்பதோடு இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு'' என்றார்.

 

kanimozhi

 

தனது பிரச்சாரம்பற்றி குறிப்பிட்ட கனிமொழி, ""கொங்கு மண்டல மக்களின் உபசரிப்பு, பண்பாடு என்னை மிகவும் கவர்ந் திருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு இந்த அரசு வேதனையைத்தான் தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறது. போகும் இடம் எல்லாம் மக்களுக்குள்ள குறைகளை கூறினார்கள். ஆட்சி மாற்றம் உடனே வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. தி.மு.க. அரசு அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். கொங்கு மண்டலப் பயணம் முழுமையான நம்பிக்கையை கொடுத்துள்ளது'' என்றார்.

 

நான்கு நாட்கள் ஈரோட்டில் இருந்த கனிமொழியை சிறு, குறு, மற்றும் தொழில் சார்ந்த அமைப்பினர், விவசாய சங்க, விசைத் தறியாளர்கள் சங்க, ஜவுளி உற்பத்தியாளர்கள், மேலும் பல்வேறு அமைப்பினர் சந்தித்து அவர்களுக்கான கோரிக்கை மனுக்களை கொடுத்ததோடு அடுத்து தி.மு.க.ஆட்சி தான். எங்களுக்கான தேவை களை நிறைவேற்றிக்கொடுங்கள் என கேட்டுக் கொண்டனர்.

 

கொங்கு மண்டலத்தில் கனிமொழியின் பயணம் அதற்கு பொது மக்களின் வரவேற்பு தி.மு.க.வுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக அமைந்துள்ளது. பலவீனமான ஏரியாவை ப்ளஸ்ஸாக மாற்றியிருக்கிறார் கனிமொழி என ஆட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம் உளவுத் துறை.

 


 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.