Skip to main content

காங்கிரசுக்கு அதிக இடங்களை தாரைவார்ப்பது புத்திசாலித்தனமல்ல! கடுப்பில் திமுகவினர்!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து நடக் கும் சச்சரவு கள் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக் குள் விரிசலை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் அரசி யல் பார்வையாளர்கள். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் செயற்குழுவைக் கூட்டி கடந்த 21-ந் தேதி ஆலோசித்தார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. சத்தியமூர்த்தி பவனில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் செயல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

dmk



கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், "உள்ளாட்சித் தேர்தல்ங்கிறது தொண்டர்களுக்கானது. அதனால் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கேற்ப இப்போதே தி.மு.க.விடம் பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், சென்னையிலுள்ள 200 வார்டுகளில் 4 இடங்களைத்தான் ஒதுக்கியது தி.மு.க. தொண்டர்கள் கொந்தளித்தார்கள். அதன்பிறகு தி.மு.க. தலைமையிடம் தலைவர்கள் பேசினார்கள். அப்படியிருந்தும் 14 இடங்கள்தான் ஒதுக்கியது. இந்தமுறை அப்படி நடந்துவிடக்கூடாது. அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்.
 

dmk



உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு களை தி.மு.க. தலைமையிடம் பேசி மேயர் பதவிகளிலிருந்து வார்டு கவுன்சிலர் வரை இத்தனை இடங்கள் என பெறவேண்டும். தொண்டர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். அதனால், அதிக இடங்களை வாங்குங்கள். குறைவான இடங்கள் எனில் தனித்துப் போட்டியிடலாம். லோக்கலில் சில அட்ஜஸ்மெண்டுகளை செய்துகொண்டால் பெருவாரியான இடங்களை நாம் பிடித்துவிடலாம். எனது மாவட்டத்தில் 35 வார்டுகள் இருக்கிறது. தனித்துப் போட்டியிட்டால் அதிக இடங்களில் காங்கிரசை வெற்றிபெற வைக்க என்னால் முடியும். அதிக இடங்களை தி.மு.க.விடம் வாங்க முடியாவிட்டால், தென்சென்னையிலாவது தனித்துப் போட்டியிட வேண்டும்'' என்றார்.

 

dmk



கராத்தே தியாகராஜனின் கருத்துக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பலரும் ஆதரவளித்தனர். அவர்களது பேச்சிலும் அது எதிரொலிக்கவே செய்தது. கே.எஸ்.அழகிரி கூட, இந்த கருத்தினை ஆமோதிப்பவராகவே தெரிந்தார். அதேசமயம், தி.மு.க. கூட்டணி தொடரவேண்டும் என்கிற கருத்தும் செயற் குழுவில் பதிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் செயற்குழுவில் எதிரொலித்த இந்த கருத்துக்கள், சிங்கப்பூரில் இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தது. அதனை அவர் ரசிக்கவில்லை. ஏற்கனவே திருச்சி பொதுக்கூட்ட மேடையில் உதயநிதி, தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என பேசியிருந்தார். தி.மு.க. நிர்வாகிகள் தரப்பிலும் இதே எண்ணம் வெளிப்படுகிறது. இந்த நிலையில், கராத்தே தியாகராஜனின் பேச்சு ஒரு நாளிதழில் வெளிவர, அதைக்கண்டு கோபமானார் தி.மு.க.வின் திருச்சி மா.செ. நேரு. குடிநீர் பிரச்சனைக்காக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ""உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும். தென் சென்னையில் 200 வார்டுகளில் 35 வார்டுகளை காங்கிரசுக்கு வாங்குவோம் என ஒருவர் கூறியிருக்கிறார். காங்கிரஸுக்கு அத்தனை சீட் கொடுத்துட்டு நாங்கள் குச்சி மிட்டாயை சப்பிக்கிட்டுப் போகவா? மக்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டுமானால் தி.மு.க. தனித்துத்தான் போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு எத்தனை நாள் பல்லக்குத் தூக்குவது? தமிழகம் முழுவதுமில்லையென்றாலும் அட்லீஸ்ட் திருச்சியிலாவது தனித்து போட்டி யிட தலைவரிடம் வலியுறுத்துவேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்றார் நேரு.

 

dmk



கே.என்.நேருவின் பேச்சு அதிரடி கிளப்ப, காங்கிரஸ் தலைவர்கள் பதறிவிட்டனர். கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடிக்க, அது டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை வரை எதிரொலித்தது. இதனையடுத்து,  கட்சிக்கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது. மீறினால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்'' என டெல்லியிலிருந்து கிடைத்த உத்தரவின்படி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்தார் கே.எஸ்.அழகிரி.

இது குறித்து தி.மு.க. தரப்பில் விசாரித்த போது,  நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என விரும்பினார் நேரு. கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு ஒதுக்கியது தலைமை. காங்கிரசுக்கு ஒதுக்கினாலும் உள்ளூர் காங்கிரசார் போட்டியிட வேண்டும் என விரும்பினார். அவருடைய சாய்ஸ், முன்னாள் எம்.பி. அடைக்கலராஜின் மகன் லூயிஸ். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இருந்தபோதும் நேருவின் உழைப்பால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் ஜெயித்தது. இருப்பினும், நேருவுக்கும் காங்கிரஸ் திருநாவுக்கரசருக்கும் எதிர்மறை உரசல்கள் இருந்து வருகிறது. 1996-ல் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மேயர் பதவி த.மா.கா.வுக்கு தி.மு.க. ஒதுக்கியது. தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கே தாரை வார்க்கப்பட்டுவிடுகிறது. இவைகள்தான் நேருவின் ஆதங்கம். அத்துடன், மேயர் பதவி கூட்டணிக்கு கொடுத்துவிட்டு, வார்டுகளில் தி.மு.க. ஜெயிப்பதால் பயன் இல்லை என்றும் நேரு நினைக்கிறார்.


தமிழகம் முழுவதும் 12,600 ஊராட்சிக் கூட்டங்களை நடத்தியிருக்கும் தி.மு.க.வினர், மக்களிடம் நேரடித் தொடர்பை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு ஜெயித்தால்தான் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். தவிர, உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. ஆளும்கட்சி என்ன செய்யும்ங்கிறது தி.மு.க.வுக்கு தெரியும். அதனால், மேயர் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தி.மு.க.தான் நேரடியாக மோத வேண்டும். உள்ளாட்சி நம் வசமானால்தான் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், காங்கிரசுக்கு அதிக இடங்களை தாரைவார்ப்பது புத்திசாலித்தனமல்ல'' என்கிறார்கள் தி.மு.க. மா.செ.க்கள். இதனை ஸ்டாலினிடமும் வலியுறுத்தியுள்ளனர்.


காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, தி.மு.க.வுக்கு எதிரான ஆதங்கங்கள் அவர்களிடமும் நிறைய இருக்கிறது. ஆக, உள்ளாட்சித் தேர்தலை மையப்படுத்தி கூட்டணி முறியுமோ? என்கிற அச்சம் காங்கிரசில் பரவியுள்ள நிலையில், கராத்தே தியாகராஜனிடம் பேசியபோது, காங்கிரசின் வளர்ச்சிக்காக தொண்டர்களின் உணர்வுகளைத்தான் கட்சியின் செயற்குழுவில் வலியுறுத்தினேன். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நான் எதையும் பேசவில்லை'' என்கிறார். நேருவிடம் நாம் பேசியபோது, "இது என் தனிப்பட்ட கருத்து. தலைமை எடுக்கும் முடிவை ஏற்பேன்'' என்றார். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் வேட்டு வெடிக்கும் என ஆளுங்கட்சி எதிர்பார்க்கிறது.

 

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.