Skip to main content

ஃப்ளூ காய்ச்சலுக்குப் பயன்படுத்தும் மருந்து கரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்துமாம்!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

ஜப்பானில் இன்ஃபுளுவென்ஸா அல்லது ஃப்ளூ வைரஸை குணப்படுத்த ஃபேவிபிரவிர் அல்லது ஏவிகன் (Favipiravir or Avigan) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை சீனாவின் வூஹான் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தினார்கள்.

 

இந்த மருந்து 340 பேருக்கு கொடுக்கப்பட்டது. அதன் பயன்கள் திருப்தி அளிப்பதாக இருந்தது என்று சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஸேங் ஸின்மின் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸுக்கான சிகிச்சையில் இந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தி கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

corona virus medicine bird flu fever

ஜப்பானின் ஃப்யூஜிஃபில்ம் டோயமா கெமிகல் நிறுவனம் உருவாக்கிய இந்த மருந்தை ஷெஜியாங் ஹிஷுன் பார்மாசூட்டிகல் நிறுவனம் உற்பத்தி செய்தது. இன்ஃப்ளுயென்ஸா வைரஸுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இது உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த மாதம் கரோனா வைரஸ் சிகிச்சைக்குச் சோதனை முறையில் சிகிச்சையளிக்க இந்த மருந்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

 

இந்த மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகள் 4 நாட்களில் குணமடைந்ததாகவும், வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டவர்கள் 11 நாட்களில் குணமடைந்ததாகவும் தெரியவந்தது. நுரையீரல் நிலைமை இந்த மருந்தைப் பயன்படுத்தியவர்களுக்கு 91 சதவீதமும், மற்றவர்களுக்கு 62 சதவீதமும் சீரானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

வூஹான் மாநிலத்தில் நோயாளிகளுக்குப் பயன்படுத்தியதில், கரோனா வைரஸ் காய்ச்சல் 4.2 நாட்கள் முதல் 2.5 நாட்களில் குணமடைந்ததாக பார்மாசூட்டிகல் டெக்னாலஜி தெரிவித்துள்ளது.

 

இந்த மருந்து, ஆர்என்ஏ வைரஸ்கள், அதாவது சார்ஸ்- கோவ்-2 (SARS-CoV-2) வைரஸ்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இது உற்பத்தி செய்யப்பட்டது.

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.